ஆப்நகரம்

முத்தம் பெற மறுத்த பள்ளி மாணவி கொலை

மத்திய பிரதேஷ் மாநிலத்தில் முத்தம் பெற மறுத்த பள்ளி மாணவியை, அவரது நண்பரே கொலை செய்துள்ளார்.

Samayam Tamil 9 Sep 2019, 11:11 am
மத்திய பிரதேஷ் மாநிலம் ஜபால்பூர் மாவட்டத்தில் பிஜப்பூர் என்ற கிராமத்தில்தான் இந்த கொடூர சம்பவம் செப். 5 ஆம் தேதி அரங்கேறியுள்ளது. இந்த கொலையை செய்தவர் உயிரிழந்த பெண்ணின் நண்பர் எனபது கண்டறியப்பட்டு செப். 6 ம் தேதி கண்டறியப்பட்டது.
Samayam Tamil category1545888318.


இந்த விவகாரம் குறித்து பிஜப்பூர் போலீசார் கூறுகையில், “ஊருக்கு வெளியே உள்ள காட்டு பகுதியில் 18 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் உயிரிழந்து கிடந்தது குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து சம்பவ இடதுக்கு விரைந்து வந்து நாங்கள் சோதனை செய்தபோது, பின்மண்டையில் காயமடைந்து இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது” என்றனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இறந்துகிடந்த அந்தப் பெண் அதே மாவட்டத்தில் உள்ள குட்டிராங்கோண்டி போலீஸ் நிலைய பகுதியில் வசித்து வந்த 12 ம் வகுப்பு மாணவி பிங்கி துருவ் என்பது தெரியவந்தது. இவர் கடந்த செப். 5 ஆம் தேதி காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட்டுள்ளார். பின் சடலமாகவே வீடு திரும்பியுள்ளார்.

பெண்ணின் இறப்பு குறித்து அவரின் நண்பர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கொலை நடந்த தினந்தன்று அந்த பெண் ராமன் சிங் (19) என்பவருடன் வெளியே சென்றது தெரியவந்தது. தொடர்ந்து ராமன் சிங் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது கொலை நடந்தது குறித்து ராமன் போலீசிடம் கூறுகையில்,’’நாங்கள் இருவரும் தனிமையில் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நான் பிங்கிக்கு முத்தம் கொடுக்க முயன்றேன். ஆனால், அவள் விருப்பமில்லாமல் கடுமையாக என்னை தள்ளிவிட்டார். எனது எதிர்ப்பை வெளிகாட்ட நான் திருப்பி தள்ளிவிட்டேன், அவள் பாறை மீது மோதி அசைவற்று கீழே விழுந்துகிடந்தாள். என்ன செய்வது என தெரியாமல், நான் அவள் உடலை இலைகள் வைத்து மறைத்து விட்டு அங்கிருந்து வீட்டுக்கு சென்றுவிட்டேன்’’ எனக் வாக்குமூலம் அளித்துள்ளார். ராமன் சிங் மீது கொலை வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அடுத்த செய்தி