ஆப்நகரம்

நெஞ்சில் உதைத்ததால் பள்ளி மாணவன் பலி

சக நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கையில் எதிர்பாராமல் சிறுவனின் நெஞ்சில் மற்றொரு சிறுவன் உதைத்து மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PTI 4 Mar 2016, 3:28 pm
கொல்கத்தா: சக நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கையில் எதிர்பாராமல் சிறுவனின் நெஞ்சில் மற்றொரு சிறுவன் உதைத்து மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil teenager dies after boy hits him on chest
நெஞ்சில் உதைத்ததால் பள்ளி மாணவன் பலி


வடக்கு கொல்கத்தா அருகே ஜோரபகன் பகுதியில் உள்ள ஞான் பாரதி பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்த மாயன்க் சுரேகா எனும் மாணவனை அவன் உடன் படிக்கும் மற்றொரு மாணவன் நெஞ்சில் உதைத்திருக்கிறான். இவர்கள் இருவரும் ஒரே டியூசன் வகுப்பில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் மயங்கி விழுந்த மாயன்க் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாயன்க் இறந்ததை உறுதி செய்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மாயன்க்கை தாக்கிய மாணவனை போலீஸ் கஸ்டடிக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி