ஆப்நகரம்

ரயில்வேயில் உணவு சாப்பிட்ட 26 பயணிகள் உடல்நலம் பாதிப்பு

கோவாவில் இருந்து மும்பைக்கு சென்ற ரயிலில் ரயில்வே உணவை சாப்பிட்ட 26 பயணிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

TOI Contributor 16 Oct 2017, 10:21 am
கோவாவில் இருந்து மும்பைக்கு சென்ற ரயிலில் ரயில்வே உணவை சாப்பிட்ட 26 பயணிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
Samayam Tamil tejas express 26 passengers admitted to hospital after eating a food
ரயில்வேயில் உணவு சாப்பிட்ட 26 பயணிகள் உடல்நலம் பாதிப்பு


கோவாவில் இருந்து மும்பைக்கு தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. இந்த ரயிலில் பயணம் செய்த பயணிகளில் சிலர் ரயில்வேக்கு சொந்தமான உணவை வாங்கி சாப்பிட்டனர்.

காலை உணவை வாங்கி சாப்பிட்ட சிலருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது. அவர்கள் சாப்பிட்ட உணவில் வி‌ஷத்தன்மை ஏற்பட்டதால் 26 பயணிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த உடன் அந்த ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. உடல்நலம் பாதிக்கப்பட்ட 26 பயணிகளும் மும்பையில் இருந்து 260 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிபுலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 3 பேருக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ரயிலில் உள்ள பயணிகள் அனைவரும் பீதி அடைந்தனர். தொங்கன் ரயில்வே துறை இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தியன் ரயில்வே கேட்ரிங் மற்றும் சுற்றுலா கழகத்தை சேர்ந்த 2 அதிகாரிகள் இது தொடா்பாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவு மாதிரியை எடுத்து ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி