ஆப்நகரம்

வாழ்த்து சொன்ன ஸ்டாலின்: அண்ணனுக்கு நன்றி சொன்ன தேஜஸ்வி

பிகார் துணை முதல்வராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் தேஜஸ்வி யாதவ்.

Samayam Tamil 11 Aug 2022, 10:36 am
பிகாரில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளார்.
Samayam Tamil mk stalin tejsawi


அதன்படி, நேற்று மாநில முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பிகார் முதல்வராக அவர் பதவியேற்பது இது 8ஆவது முறை. நிதிஷ் குமாரைத் தொடர்ந்து மாநிலத்தின் துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுக் கொண்டார்.

இதனிடையே, பிஹாரில் அமைந்துள்ள புதிய அரசுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிஹாரின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. நிதிஷ் குமார், துணை முதலமைச்சகராகப் பொறுப்பேற்றுள்ள சகோதரர் தேஜஸ்விக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். பிகாரில் பெருங்கூட்டணியின் இந்த மீள் வருகை நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையில் காலத்தே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு முயற்சி" என்று பதிவிட்டுள்ளார்.
அதிமுகவுக்கு நிதிஷ்குமார் சொல்லும் பாடம்: ஆளுமைன்னா என்ன தெரியுமா?
மு.க.ஸ்டாலினின் இந்த வாழ்த்துக்கு தேஜஸ்வி யாதவ் நன்றி தெரிவித்துள்ளார். ஸ்டாலினின் பதிவை டேக் செய்து, “நன்றி அண்ணா!... பிரிவினைவாத மற்றும் எதேச்சதிகார அரசை (ஒன்றிய அரசை) எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். இன்று முதல் அவர்களுக்கு பின்னடைவு தொடங்குகிறது. அன்பான நன்றிகள்" எனத் தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் பாட்டிலில் மது விற்பனையா? டாஸ்மாக் நிறுவனம் சொன்ன பதில்!
பிகார் அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பிராந்திய கட்சிகள் ஒரே அணியில் இணைந்து பாஜகவை எதிர்ப்பதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி