ஆப்நகரம்

பாலத்தில் இருந்து கீழே விழுந்த கார்; காப்பாற்ற சென்றவரும் உயிரிழந்த பரிதாபம்

தெலங்கானா மாநிலத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் ஒருவர் பலியானதுடன், சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்ட காவர் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்

Samayam Tamil 16 Feb 2020, 3:32 pm
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil telangana car accident two dead
பாலத்தில் இருந்து கீழே விழுந்த கார்; காப்பாற்ற சென்றவரும் உயிரிழந்த பரிதாபம்


தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் பகுதியிலுள்ள சுபாஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். அவரும், அவரது மனைவியும் காரில் இன்று வாராங்கலுக்கு சென்றுள்ளனர். கரீம் நகரில் இருந்து ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் அவர்களது கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே விபத்துக்குள்ளானது.

சிசிடிவி ஷாக்; அமைதியா படிக்கும் மாணவர்களை அடிவெளுக்கும் போலீஸ் - ஜாமியா கொடூரம்!

இந்த விபத்தில் சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாலத்தில் இருந்து கயிறு கட்டி கீழே இறங்க முயற்சித்த காவலர் ஒருவர், கயிறு அறுந்து கீழே விழுந்ததில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்று பரிதாபமாக அவரும் உயிரிழந்தார். இந்த விபத்து காரணமாக சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அடுத்த செய்தி