ஆப்நகரம்

தெலங்கானா முதல்வர் அம்மனுக்கு ரூ.137 கோடியில் வைர மூக்குத்தி காணிக்கை!

தனி மாநிலமாக தெலுங்கானா உருவானதற்கு காணிக்கை செலுத்தும் வகையில் ரூ. 137 கோடிக்கு கனக துர்க்கை அம்மனுக்கு மூக்குத்தி காணிக்கையாக அளித்துள்ளார்.

Samayam Tamil 29 Jun 2018, 6:21 pm
தனி மாநிலமாக தெலுங்கானா உருவானதற்கு காணிக்கை செலுத்தும் வகையில் ரூ. 137 கோடிக்கு கனக துர்க்கை அம்மனுக்கு மூக்குத்தி காணிக்கையாக அளித்துள்ளார்.
Samayam Tamil Chandrasekhar Rao


தெலுங்கானா மாநில முதல்வராக சந்திர சேகரராவ் உள்ளார். இவர் தனித் தெலுங்கான உருவாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர்.

இதையடுத்து 2014 ஜூன் 2ம் தேதி தனி தெலுங்கானா மாநிலம் உருவானது. அதன் பின்னர் நடந்த தேர்தலில் தெலுங்கானா ராஸ்ட்ர சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

வைர மூக்குத்தி காணிக்கை :
தெலுங்கானா தனி மாநிலமாக உருவானால் விஜயவாடாவில் உள்ள கனக துர்கையம்மனுக்கு வைர மூக்குத்தி காணிக்கை அளிப்பதாக வேண்டியிருந்தார்.


இந்நிலையில் ரூ. 137 கோடிக்கு வைர மூக்குத்தியை காணிக்கையாக அளிக்கும் பொருட்டு, சந்திரசேகர ராவே தன் தலையில் சுமந்து சென்று காணிக்கையாக வழங்கியுள்ளார்.

அடுத்த செய்தி