ஆப்நகரம்

நாளை முதல் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளித்து முதல்வர் உத்தரவு!

பொது பேருந்து போக்குவரத்து செயல்பட தெலங்கானாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது...

Samayam Tamil 27 May 2020, 11:42 pm
"மக்கள் உயிர்தான் முக்கியம், பொருளாதாரம் சரிந்தால் மீட்டுக் கொள்ளலாம். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளே கொரோனாவை கண்டு அஞ்சும் நேரத்தில் நாம் பொறுமையாக இருக்க வேண்டும்" எனப் பேசியவர் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.
Samayam Tamil நாளை முதல் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளித்து முதல்வர் உத்தரவு!
நாளை முதல் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளித்து முதல்வர் உத்தரவு!


இந்த பேச்சுக்களைப் பேசி நாட்டு மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பிய சந்திரசேகர ராவ் இப்போது தெலங்கானாவில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கி வியாழக்கிழமை முதல் செயல்பட அனுமதி வழங்கியுள்ளார்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்


நாட்டில் கேரளா, கர்நாடகா மாநிலங்களைத் தொடர்ந்து இப்போது தெலங்கானாவில் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

40 ரயில்கள் தப்பான இடத்திற்குச் சென்று சேர்ந்த கொடுமை, உணவின்றி தவித்த மக்கள்!

சற்று நேரத்திற்கு முன் தெலங்கானாவிலிருந்து வெளியான அரசு அறிவிப்பில், "ஊரடங்கு கட்டுப்பாட்டிலிருந்து பொது பேருந்து போக்குவரத்துக்கு விலக்கு அளித்து முதல்வர் சந்திரசேகர ராவ்" உத்தரவு பிறபித்துள்ளார்.

மக்கள் உயிர்தான் முக்கியம் எனக் கூறி 4ஆம் கட்ட ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்ட தெலங்கானா முதல்வர் இப்போது பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி