ஆப்நகரம்

‘48ஆயிரம் பேருக்கு வேலை இல்ல’: தெலங்கானா முதல்வர்!

தெலங்கானாவில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்திய போக்குவரத்து ஊழியர்கள் 48 ஆயிரம் பேரை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Samayam Tamil 7 Oct 2019, 4:20 pm
தெலங்கானாவில் சாலை போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதிய உயர்வு, போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும் உட்பட 26 கோரிக்கைகளை முன் வைத்துக் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈட்டுப்பட்டு வருகின்றனர்.
Samayam Tamil telangana cm


இதற்கிடையில், பண்டிகை காலம் என்பதால் தெலங்கானாவில் 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தொடங்கப்பட்ட போராட்டத்தால், மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல கடும் அவதிப்பட்டனர்.

சாலை போக்குவரத்து ஊழியர்களின் இந்த போராட்டத்தை நேற்று மாலைக்குள்ளாக முடித்துக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்தது. இந்த போராட்டத்தால், அரசுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

எனினும் இதைக் கண்டுகொள்ளாத சாலை போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தனர். இந்த சூழலில், சந்திரசேகர் ராவ், போராட்டத்தில் ஈட்டுப்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் 48 ஆயிரம் பேரை பணியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது. பணிநீக்கம் குறித்து சந்திரசேகர் ராவ் கூறுகையில், “விழாக் காலத்தில், போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தியது மன்னிக்க முடியாத குற்றம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

முதல்வரின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, போராட்டம் பெரிதாக வெடிக்கும் எனக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், மாற்று வழியாகத் தற்காலிக ஓட்டுநர்களையும், நடத்துநர்களையும் நியமித்து பேருந்துகளை ஆந்திர அரசு இயக்கி வந்தது. இந்த முறையால், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், விபத்துக்கள் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி