ஆப்நகரம்

வீரமரணம் அடைந்த அனைத்து ராணுவ வீரர்களுக்கும் இழப்பீடு: தெலங்கானா அரசு அதிரடி அறிவிப்பு!

இந்தியா, சீனா மோதலில் வீரமரணம் அடைந்த பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என தெலங்கானா முதல்வர் அறிவித்துள்ளார்

Samayam Tamil 19 Jun 2020, 9:28 pm
இந்திய-சீன எல்லை பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15ஆம் தேதி இரவு இரு நாட்டு ராணுவ வீரர்களும் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின் போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது நடைபெற்ற துப்பாக்கி சண்டையின் போது, இந்திய ராணுவ தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
Samayam Tamil சந்திரசேகர ராவ்
சந்திரசேகர ராவ்


இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எந்த நடவடிக்கைக்கும் இந்திய ராணுவம் தயாராக உள்ளது. ஒரு அங்குலம் நிலத்தை கூட யாரும் கண் வைக்க முடியாது என்றார்.

இந்த நிலையில், லடாக்கில் சீன ராணுவ தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ அதிகாரி சந்தோஷ் பாபு குடும்பத்திற்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்கப்படும் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். அத்துடன், சந்தோஷ் பாபு குடும்பத்திற்கு ஒரு வீடு, அவரது மனைவிக்கு குரூப்-1 நிலையிலான அரசு பணி தரவும் தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

உளவுத்துறை தோல்வியடைந்து விட்டதா? சோனியா சரமாரி கேள்வி!

அதுதவிர, எல்லையில் வீரமரணம் அடைந்த பிற மாநிலங்களை சேர்ந்த 19 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் எனவும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

முன்னதாக, சீனாவுடனான மோதலில் வீரமரணம் அடைந்த தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் பழனிசாமி .20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும், பழனி குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் ஆணையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி