ஆப்நகரம்

ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்களை காணிக்கையாக செலுத்திய முதல்வர்..!

திருப்பதி கோவிலுக்கு 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்களை காணிக்கையாக செலுத்தி,தனது வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார் தெலங்கானா மாநில முதல்வர்.

TNN 22 Feb 2017, 4:40 pm
திருப்பதி கோவிலுக்கு 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்களை காணிக்கையாக செலுத்தி,தனது வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார் தெலங்கானா மாநில முதல்வர்.
Samayam Tamil telangana cm k chandrasekhar rao fulfils rs 5 crore vow at tirupati
ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்களை காணிக்கையாக செலுத்திய முதல்வர்..!




இதற்காக இன்று காலை விமானம் மூலம் திருப்பதிக்கு தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் வருகை புரிந்தார்.இதற்கு முன்னர் திருப்பதி கோவிலுக்கு வருவதற்கு சந்திர சேகர் ராவ் பல முறை திட்டமிட்டும்,இன்று தான் அந்த திட்டம் நிறைவேறியுள்ளதாம்.



சந்திர சேகர ராவ் மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினர்,சில கேபினட் அமைச்சர்கள் உடன் வந்திருந்தனர்.இன்று காலை திருப்பதி விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு,தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


அதன் பின்னர் திருப்பதி கோவிலில் குடும்பத்தினரோடு சுவாமி தரிசனம் செய்த ராவ்,பின்னர் சுமார் ஐந்து கோடி மதிப்புள்ள ’சாலிகிராம ஹரம்’ மற்றும் பெடாலா கந்தாபரணம்’ ஆகிய ஆபரணங்களை காணிக்கையாக செலுத்தினார்.


மேலும் திருச்சானூரில் உள்ள பத்மாவதி அம்மன் கோவிலில் தரிசனம் மேற்கொண்ட அவர்,அம்பாளுக்கு வைர மூக்குத்தியை காணிக்கையாக செலுத்தினார்.



ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டால்,திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு தங்க ஆபரணங்களை காணிக்கையாக செலுத்துவதாக ராவ் வேண்டிக் கொண்டாராம்.அந்த வேண்டுதல் நிறைவேறியதால்,ஆபரணங்களை இன்று காணிக்கையாக செலுத்தியுள்ளாராம்.

Telangana CM K Chandrasekhar Rao fulfils Rs 5 crore vow at Tirupati

அடுத்த செய்தி