ஆப்நகரம்

திருப்பதி கோவிலுக்கு ஐந்து கோடி மதிப்புள்ள ஆபரணங்களை வழங்க உள்ள தெலங்கானா முதல்வர்..!

திருப்பதி கோவிலுக்கு ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்களை நாளை தெலங்கானா மாநில முதல்வர் சந்திர சேகர் ராவ் காணிக்கையாக வழங்க உள்ளார்.

TNN 21 Feb 2017, 8:26 pm
திருப்பதி கோவிலுக்கு ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்களை நாளை தெலங்கானா மாநில முதல்வர் சந்திர சேகர் ராவ் காணிக்கையாக வழங்க உள்ளார்.
Samayam Tamil telangana cm to offer jewels worth over 5 crore to tirupati deity
திருப்பதி கோவிலுக்கு ஐந்து கோடி மதிப்புள்ள ஆபரணங்களை வழங்க உள்ள தெலங்கானா முதல்வர்..!



தெலங்கானா மாநிலம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து,இந்த காணிக்கையை திருப்பதி கோவிலுக்கு அவர் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.இன்று மாலை திருப்பதிக்கு சென்ற சந்திர சேகர் ராவ்,நாளை காலை திருப்பதி கோவிலுக்கு செல்ல உள்ளார்.அப்போது அவர் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் இந்த ஆபரணங்களை ஒப்படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்நிலையில் ராவ் காணிக்கையாக செலுத்த உள்ள ஆபரணங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி,அவை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.கடந்தாண்டு அக்டோபர் மாதம் 3.35 கோடி மதிப்புள்ள 11.7 கிலோ கிராம் எடை தங்க கிரீடத்தை வாராங்கல் பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு ராவ் காணிக்கையாக அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.




Telangana CM To Offer Jewels Worth Over ₹5 Crore To Tirupati Deity

அடுத்த செய்தி