ஆப்நகரம்

கூலி வேலையாக ஐஸ்கிரீம் விற்ற முதலமைச்சரின் மகன்! எத்தனை லட்சத்திற்கு விற்றார் தெரியுமா?

கூலி வேலையாக ஐஸ்கிரீம் விற்ற முதலமைச்சரின் மகன்! எத்தனை லட்சத்திற்கு விற்றார் தெரியுமா?

TOI Contributor 15 Apr 2017, 4:27 pm
தெலங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவின் மகன் கூலி வேலையாக கட்சி நிதிக்காக ஐஸ்கிரீம் விற்றுள்ளார்.
Samayam Tamil telangana cms son sold ice cream for his party
கூலி வேலையாக ஐஸ்கிரீம் விற்ற முதலமைச்சரின் மகன்! எத்தனை லட்சத்திற்கு விற்றார் தெரியுமா?


தெலங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ், தெலங்கானா ராஷ்ட்ரிய கட்சி தொண்டர்கள் அனைவரும் கட்சியின் பொதுக்குழு மாநாட்டுக்காக கூலி வேலை செய்து நிதி திரட்ட வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் தானும் இரண்டு நாட்கள் கூலிவேலை செய்யப்போவதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையி்ல் முதல்வரின் மகன் கே.டி.ராமாராவ் கூலி வேலையாக ஐஸ்கிரீம் விற்றுள்ளார். அதுவும் ஒரு மணிநேரத்தில் 7.5 லட்ச ரூபாய்க்கு ஐஸ்கிரீம் விற்று கட்சிக்கு நிதி அளித்துள்ளார்.

ஹைதராபாத் – நாக்பூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் கடைக்குள் சென்ற ராமாராவ் உடனடியாக வேலைக்கு சேர்ந்துவிட்டார். வேலைக்கு சேர்ந்த ஒரு மணிநேரத்திலேயே 7.5 லட்ச ரூபாய்க்கு ஐஸ்கிரீம் விற்றுள்ளார். அதில் கட்சியின் மூத்த தலைவர் மல்லா ரெட்டி ஒரு ஐஸ்கிரீமை 5 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி