ஆப்நகரம்

கொண்டாட்டத்தில் விபரீதம்; மாநில உதய விழாவில் மயங்கி விழுந்த துணை முதல்வர்

தெலங்கானா மாநில விழாவில் துணை முதல்வர் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

TNN 2 Jun 2017, 2:00 pm
ஐதராபாத்: தெலங்கானா மாநில விழாவில் துணை முதல்வர் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Samayam Tamil telangana deputy cm fell down
கொண்டாட்டத்தில் விபரீதம்; மாநில உதய விழாவில் மயங்கி விழுந்த துணை முதல்வர்


தெலங்கானா மாநிலம் உதயமானதன் 3ஆம் ஆண்டு கொண்டாட்டங்கள் இன்று நடைபெற்று வருகின்றன. அதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசு சார்பில் ஐதராபாத்தில் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதில் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கலந்து கொண்டார். அவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். இதற்கிடையில் விழாவில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் கடியம் ஸ்ரீ ஹரி திடீரென மயங்கி விழுந்தார். அவரை பாதுகாவலர்கள் பத்திரமாக அழைத்து சென்றனர்.

இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையில் சன்ஸ்டோக் எனப்படும் வெப்பத் தாக்கு காரணமாக மயக்கம் ஏற்பட்டதாக கூறினர்.

Telangana Deputy CM fell down in the formation day of Telangana.

அடுத்த செய்தி