ஆப்நகரம்

மனைவி டார்ச்சரால் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய டாக்டர்!

மனைவி தன்னை துன்புறுத்துவதால், விவாகரத்து வேண்டும் என டாக்டர் ஒருவர் செல்போன் டவரின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN & Agencies 16 Nov 2017, 6:25 pm
மனைவி தன்னை துன்புறுத்துவதால், விவாகரத்து வேண்டும் என டாக்டர் ஒருவர் செல்போன் டவரின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil telangana doctor climbs cell tower to seek divorce
மனைவி டார்ச்சரால் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய டாக்டர்!


தெலுங்கானாவின் ஜகித்யால் மாவாட்டத்தை சேர்ந்தவர் அஜய்குமார் ராவ். இவர் டாக்டராக உள்ளார். இவரது மனைவி லஷ்யாவுக்கும், இவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வெறுத்துப்போனஅஜய்குமார், செல்போன் டவரின் மீது ஏறி கீழே குதித்து விடுவேன் என மிரட்டினார்.

பின் ஒரு கடிதத்தை அவர் கீழே தூக்கி வீசியுள்ளார். அதை பார்த்த போலீசார் என் மனைவி என்னை துன்புறுத்துகிறார். இரண்டு நாட்களுக்கு முன் என்னை வீட்டிலிருந்து வெளியில் துரத்தி விட்டார், உடனடியாக எனக்கு விவாகரத்து வேண்டும்.

இல்லை என்றால் கீழே குதித்து விடுவேன். ஆண்களுக்கு பாதுகாப்பே இல்லையா என அதில் அவர் எழுதியிருந்தார்.

ஒருவழியாக அஜய்குமாரை டவரிலிருந்து கீழே இறங்கிய பின் கவுன்சிலிங்குக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Telangana doctor climbs cell tower to seek divorce

அடுத்த செய்தி