ஆப்நகரம்

விவசாயிகளுக்கு இலவசமாக உரம்: தெலங்கானா முதல்வர் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் இலவசமாக உரம் வழங்கும் திட்டத்தை தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

TNN 13 Apr 2017, 9:27 pm
விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் இலவசமாக உரம் வழங்கும் திட்டத்தை தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
Samayam Tamil telangana farmers to get free fertilisers from next year
விவசாயிகளுக்கு இலவசமாக உரம்: தெலங்கானா முதல்வர் அறிவிப்பு


தெலுங்கானா மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் இதனை இன்று அறிவித்தார்.

இத்திட்டத்திற்காக ஆண்டு தோறும் ரூ.7000 கோடி அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்றும் இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 55 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏற்கெனவே, தெலுங்கானா மாநில அரசு ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பிலான விவசாயிகளின் வங்கிக்கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி