ஆப்நகரம்

வீரமரணம் அடைந்த ராணுவவீரர் மனைவிக்கு துணை ஆட்சியர் பதவி: முதல்வருக்கு குவியும் பாராட்டு!

இந்திய - சீன எல்லையில் வீர மரணம் அடைந்த கர்னல் சந்தோஷ் பாபுவின் மனைவிக்கு துணை ஆட்சியர் பதவி வழங்கியுள்ள தெலங்கானா முதல்வருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

Samayam Tamil 23 Jul 2020, 3:29 pm
இந்திய-சீன எல்லை பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின் போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது நடைபெற்ற துப்பாக்கி சண்டையின் போது, இந்திய ராணுவ தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
Samayam Tamil சந்தோஷி
சந்தோஷி


வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் உடல்கள் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீடுகளை அந்தந்த மாநில அரசுகள் வழங்கின. அந்த வகையில், சீன ராணுவ தாக்குதலில் வீரமரணமடைந்த தெலங்கானாவை சேர்ந்த ராணுவ அதிகாரி கர்னல் சந்தோஷ் பாபு குடும்பத்திற்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்கப்படும் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்தார். அத்துடன், சந்தோஷ் பாபு குடும்பத்திற்கு ஒரு வீடு, அவரது மனைவிக்கு குரூப்-1 நிலையிலான அரசு பணி தரவும் தெலங்கானா அரசு உத்தரவிட்டது.

அதுதவிர, எல்லையில் வீரமரணம் அடைந்த பிற மாநிலங்களை சேர்ந்த 19 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் எனவும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்தார். அவரது அறிவிப்பு பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும் அப்போது பெற்றது.

லாக்டவுன் முடிஞ்சது, வண்டியை எடுத்துட்டு கிளம்பிய மக்கள் - நெரிசலில் ஸ்தம்பித்த பெங்களூரு!

இந்த நிலையில், வீரமரணமடைந்த சந்தோஷ் பாபுவின் மனைவி சந்தோஷிக்கு துணை ஆட்சியர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி நியமன ஆணையை முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று நடைபெற்ற நிகழ்சியில் வழங்கினார். முதலில் வணிக வரி அதிகாரி பதவிக்காக சந்தோஷி விண்ணப்பித்துள்ளார். அதன்பின்னர், அவரது படிப்புக்குத் துணை ஆட்சியர் பதவி பொருத்தமாக இருக்கும் என நினைத்ததால் அந்தப் பதவியைக் கேட்டுள்ளார். அதற்கு மாநில அரசும் சம்மதம் தெரிவித்துள்ளது.

பணி நியமன ஆணை


அதிகாரிகளை சந்தோஷிக்கு முதல்வர் சந்திரசேகர ராவே அறிமுகம் செய்து வைத்து புதிய துணை ஆட்சியருக்கு பணிகள் அனைத்தும் தெரியும் வரை ஆட்சியர் அலுவலகத்தில் இருப்பவர்கள் அவருக்கு உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டதுடன், தன்னுடைய செயலர் ஸ்மித்தா சபர்வாலிடம் சந்தோஷிக்கு உதவுமாறும் கேட்டுக் கொண்டார். மேலும், ஹைதராபாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலேயே சந்தோஷியை பணியமர்த்த வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, சந்தோஷியின் குடும்பத்தினருடன் மதிய உணவருந்திய முதல்வர் சந்திரசேகர ராவ், அவர்களிடம் நலம் விசாரித்ததுடன், தான் எப்போதும் ராணுவ வீரரின் குடும்பத்துக்கு உறுதுணையாக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.

அடுத்த செய்தி