ஆப்நகரம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை பாராட்டு!

கண்களை தானமாக வழங்குவதற்கான உறுதிமொழியை அளித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 8 Sep 2020, 3:41 pm
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் கண்தானம் செய்ய விரும்புவோர்களுக்கு உதவிடும் வகையில், தமிழ்நாடு மாநில நலவாழ்வு குழுமத்தால் உருவாக்கப்பட்ட www.hmis.tn.gov.in/eye-donor என்ற இணையதளத்தை தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.
Samayam Tamil தமிழிசை செளந்திரராஜன்
தமிழிசை செளந்திரராஜன்


இந்த இணையதளம் மூலம், கண்தானம் செய்ய விரும்புவோர், தங்களது பெயர், இருப்பிட முகவரி, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களை பதிவு செய்து, கண் தானத்திற்கான உறுதிமொழியினை ஏற்ற பின்பு, அதற்கான சான்றிதழை நேரடியாக இணையதளத்தின் வாயிலாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, தனது கண்களை தானமாக வழங்குவதற்கான உறுதிமொழியினை தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்தார். அதற்கான சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி: கண்தானம் செய்து முன்னுதாரணமான முதல்வர்

இந்த நிலையில், கண் தானம் செய்வதற்கான உறுதி மொழி அளித்துள்ள முதல்வர் பழனிசாமிக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் “கண் தானத்தை ஊக்குவிக்கும் வண்ணம் எனது கண்களை தானம் செய்ய உள்ளேன் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கண் தானம் செய்ய உறுதி பத்திரத்தில் கையெழுத்திட்டு இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது” என்று தமிழிசை பதிவிட்டுள்ளார்.

கண் தானம் செய்வட்தால் வெளிச்சம் இல்லாதவர்கள் வாழ்வில் ஒளியேற்றலாம். எனவே, அனைவரும் கண் தானம் செய்ய முன் வர வேண்டும் என்றும் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி