ஆப்நகரம்

பத்திரிகையாளர் நலனுக்காக பட்ஜெட்டில் ரூ.10 கோடி ஒதுக்கிய மாநில அரசு

பத்திரிகையாளர் நலனுக்காக ரூ.10 கோடி ஒதுக்கி தெலங்கானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

TNN 15 Feb 2017, 7:41 am
ஐதராபாத்: பத்திரிகையாளர் நலனுக்காக ரூ.10 கோடி ஒதுக்கி தெலங்கானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil telangana govt to allocate rs 10 cr for journalists welfare
பத்திரிகையாளர் நலனுக்காக பட்ஜெட்டில் ரூ.10 கோடி ஒதுக்கிய மாநில அரசு


தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், அமைச்சர் ராமாராவ், தலைமை ஆலோசகர் ராஜீவ் ஷர்மா, ரமணாசாரி, பிரஸ் அகாடமி தலைவர் அல்லம் நாராயணா உள்ளிட்டோரிடம் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து தெலங்கானா அரசு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் நாட்டிலேயே முதல் முறையாக பத்திரிகையாளர்களின் நலனுக்காக திட்டம் வகுத்த அரசு, தெலங்கானா மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பொது பட்ஜெட்டில், பத்திரிகையாளர்கள் நலனுக்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

நடப்பாண்டின் பட்ஜெட்டிலும் ரூ.10 கோடி ஒதுக்க முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அந்த நிதியை, பத்திரிகையாளர்களின் நலன் தொடர்பாக திட்டங்களை பிரஸ் அகாடமி மூலம் செயல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த பத்திரிகையாளரின் குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாயும், 5 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3000 நிவாரணத் தொகையும் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. மேலும் பத்திரிகையாளர்களின் 10ஆம் வகுப்பிற்கு கீழ் படிக்கும் இரண்டு குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 தொகையும், வெளிநாடுகளில் படித்தால் உரிய உதவித் தொகை அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Telangana Government today said it would allocate Rs 10 crore every year for the journalists’ welfare.

அடுத்த செய்தி