ஆப்நகரம்

அரசை தவறாக விமா்சித்தால் சிறை தண்டனை – புதிய சட்டம்

அரசையோ, தனிநபரையோ சமூக வலைதளங்கள் மற்றும் நேரடியாக தவறான முறையில் விமா்சித்தால் சிறை தண்டனை வழங்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை தெலங்கானா அரசு நடைமுறை படுத்தவுள்ளது.

samayam Tamil 28 Jan 2018, 10:22 pm
அரசையோ, தனிநபரையோ சமூக வலைதளங்கள் மற்றும் நேரடியாக தவறான முறையில் விமா்சித்தால் சிறை தண்டனை வழங்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை தெலங்கானா அரசு நடைமுறை படுத்தவுள்ளது.
Samayam Tamil telangana hardens law against dissent to book offenders without court nod
அரசை தவறாக விமா்சித்தால் சிறை தண்டனை – புதிய சட்டம்


தெலுங்கானா மாநிலத்தில் சந்திர சேகர ராவ் தலைமையிலான அரசு ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. மாநிலத்தை முன்னேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் அம்மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தற்போதைய டிஜிட்டல் உலகில் சமூக வலைதளங்கள் வழியிலான தாக்குதல்கள் அதிகாித்து வருகின்றன. அவற்றை குறைக்கும் பொருட்டு புதிய சட்டம் ஒன்றை அம்மாநில அரசு அமல்படுத்த உள்ளது.

அதன்படி அரசின் திட்டங்களையோ, தனிநபரையோ சமூக வலைதளங்கள் வாயிலாக யாரேனும் தவறாக விமா்சித்தால் அவா்களுக்கு சிறைத் தண்டனை வழங்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட உள்ளது. இணையதளம் மட்டுமல்லாது நேரடி தாக்குதலுக்கும் இந்த சட்டம் பொருந்தும் என்று தொிவிக்கப்படுகிறது.

தவறான விமா்சனங்கள் முன்வைக்கப்படும் பொழுது அவா்களுக்கு அபராதத்துடன் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வங்க சட்டத்தில் வழிவகை செய்யப்படுகிறது. ஆனால் இதற்கு பல்வேறு அமைப்பினரும் கடும் எதிா்ப்பு தொிவித்து வருகின்றனா். மேலும் இது தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் தொிவித்து வருகின்றனா்.

அடுத்த செய்தி