ஆப்நகரம்

தெலுங்கானா : விரும்பும் கடையில் ரேஷன் பொருட்கள் வாங்கலாம்

விரும்பும் கடையில் ரேஷன் பொருட்கள் வாங்கலாம்; தெலுங்கானாவில் புதிய திட்டம் அமல்

Samayam Tamil 2 Apr 2018, 9:37 am
தெலுங்கானா மாநிலத்தில் மக்கள் தங்களுக்கு விருப்பமான எந்த ரேஷன் கடையில் வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கும் புதிய திட்டம் அமலுக்கு வந்தது.
Samayam Tamil telangana govt



தெலுங்கானாவில் சுமார் 85 லட்சம் குடும்பங்களுக்கு ரேஷன் அட்டை உள்ளது. இவர்கள் தங்கள் குடும்பத்துக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக 17 ஆயிரம் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், பல பேர் வேலை தேடியும், பணியிட மாற்றம் காரணமாகவும் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இடம்பெயர்ந்து வருவதால், ரேஷன் பொருட்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதை தீர்க்கும் வகையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் அம்மாநில் அரசு புதிய திட்டம் ஒன்றை சோதனை அடிப்படையில் செயல்படுத்தியது.

அதன்படி, அங்குள்ள மக்கள் எங்கு வேண்டுமானாலும், தங்களுக்கு அருகில் உள்ள ரேஷன் கடையில் பொருட்களை வாங்கும் வசதியை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வரவேற்றனர்.

தொடர்ந்து இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான முயற்சியில் மாநில அரசு இறங்கியது. இதன் விளைவாக இந்த புதிய திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் சுமார் 2.75 கோடி மக்கள் பலன் அடைவார்கள் என்று உணவுப்பெருள் பங்கீட்டுத்துறை கமிஷனர் சி.வி. ஆனந்த் தெரிவித்திருந்தார்.

அடுத்த செய்தி