ஆப்நகரம்

தெலங்கானா நீர்மின்நிலைய தீ விபத்து: 9 பேர் உடல் கருகிப் பலி!

தெலங்கானாவில் மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டபோது, தீ பரவாமலிருக்க ஊழியர்கள் எடுத்த முயற்சியே பலரை உள்ளே சிக்க வைத்துள்ளது என தெரியவந்துள்ளது...

Samayam Tamil 21 Aug 2020, 8:08 pm
தெலங்கானா ஸ்ரீ சைலம் பகுதியில் உள்ள நீர்மின் உற்பத்தி நிலையத்தில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 9 பேரும் உயிரிழந்தனர் என அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil தெலங்கானா நீர்மின்நிலைய தீ விபத்து: 9 பேர் உடல் கருகிப் பலி!
தெலங்கானா நீர்மின்நிலைய தீ விபத்து: 9 பேர் உடல் கருகிப் பலி!


தெலங்கானா மாநிலத்தின் எல்லைப் பகுதியில் ஸ்ரீ சைலம் என்ற பகுதி உள்ளது. இங்கு நீர்மின் ஆலை உள்ளது. இந்த நீர்மின் ஆலையின் உள்ள ஒரு மின் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு 10: 30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்து காரணமாகக் குறிப்பிட்ட மின் நிலையத்திலிருந்த 19 பேர் உள்ளேயே சிக்கிக் கொண்டனர் எனத் தகவல் வெளியானது. விபத்து குறித்துத் தகவலறிந்து தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியிலும் உள்ளே இருப்பவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

துரித முயற்சி காரணமாக தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் சிக்கியிருந்த 10 பேரைப் பத்திரமாக மீட்டனர். எனினும் 9 பேரை மீட்க முடியவில்லை. அவர்கள் மின் நிலையத்திற்குள்ளே சிக்கிக் கொண்டனர்.

அடேங்கப்பா, வெறும் 10 நாளில் இப்படியா? முரட்டுத்தனமா போட்டுத் தாக்கிய மழை!

இதையடுத்து உள்ளே இருப்பவர்களை மீட்கத் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். இந்நிலையில் சிக்கிக் கிடந்த 9 பேரும் தீயில் கருகி உயிரிழந்ததாக அரசு தெரிவித்தது.

உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்புப் படையினர் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறுகையில், “தீ ஏற்பட்டவுடன் உள்ளிருந்தவர்கள் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளனர். இதற்கிடையே தீ பரவாமலிருக்க அனைத்து மின் நிலையங்களும் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டன. இதன் காரணமாகவே உள்ளே இத்தனை பேர் சிக்கி உயிரிழந்தனர்” என்கிறார்.

தீ விபத்து ஏற்பட்ட மின் நிலையம் கீழ் மட்டத்திலிருந்ததால், மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி