ஆப்நகரம்

தெலங்கானா முதல்வருக்காக நாக்கை வெட்டி கோயில் உண்டியலில் போட்ட தீவிர தொண்டர்

தெலங்கானா மாநில முதல்வருக்காக நாக்கை வெட்டி கோவில் உண்டியலில் போட்ட வாலிபர்

Samayam Tamil 6 Dec 2018, 4:47 pm
சந்திரசேகரராவ் மீண்டும் தெலங்கானாவின் முதல்வராக வரவேண்டும் என்பதற்காக அவரது தீவிர தொண்டர் ஒருவர் தனது நாக்கை வெட்டி கோயில் உண்டியலில் காணிக்கையாக போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil நாக்கை வெட்டி கோவில் உண்டியலில் போட்ட வாலிபர்: காரணம் இதுதான்


தெலங்கானாவிற்கு நாளை ஒரேகட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் நேற்றுடன் அம்மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் பரபரப்புரை ஓய்ந்தது. இந்நிலையில் ஹைதராபாத் கோயில் ஒன்றுக்கு சாமி கும்பிட வந்த ராஷ்டிரிய சமேதி கட்சி தொண்டர் ஒருவர், யாரும் எதிர்பாரதவிதமாக திடீரென தனது நாக்கை வெட்டி அருகிலிருந்த உண்டியில் காணிக்கையாக போட்டார்.

இதை பார்த்து அருகிலிருந்த பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். சுதாரித்துக்கொண்டு அவர்கள் நாக்கை வெட்டிக்கொண்ட தொண்டரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்த விவரங்கள் போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டன.

சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் அந்த நபரிடம் விசாரித்தனர். அப்போது அவர் பெயர் மகேஷ் என்பதும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சார்ந்துள்ள ராஷ்டிரிய சமேதி கட்சி ஆதரவாளர் என்பதும் தெரியவந்தது.

தற்போது அவரது நிலை கட்டுக்குள் இருப்பதாகவும், மீண்டும் நாக்கை ஒட்டவைக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் ஒஸ்மானியா மருத்துவமனை மருத்துவர்கள் கூறினர்.

அடுத்த செய்தி