ஆப்நகரம்

தீவிரவாத வலை வீச்சுக்கு பயன்படும் "செல்போன் ஆஃப்"

தீவிரவாத வலை வீச்சுக்கு செல்போன் அப்ளிகேஷன்கள் பயன்படுத்தப்படுகின்றன என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

TOI Contributor 25 Jul 2016, 5:08 pm
ஹைதராபாத்: தீவிரவாத வலை வீச்சுக்கு செல்போன் அப்ளிகேஷன்கள் பயன்படுத்தப்படுகின்றன என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil telegram used to spin terror web
தீவிரவாத வலை வீச்சுக்கு பயன்படும் "செல்போன் ஆஃப்"


"மேமொயர்ஸ் ஆஃப் முஜாஹுதீன், பக் நியூஸ், காலிபேட் ஸைபர் ஆர்மி, ஸ்லேவ் ஆஃப், ரேடிகல் கேர்ல்," இவையெல்லாம் ஹாலிவுட் படங்கள் என்று எண்ணி விட்ட வேண்டாம். இவை தான், செல்போன் அப்ளிகேஷனில் வரும் குரூப் பெயர்கள். இவை ஐஎஸ் தீவிரவாத அனுதாபிகளால் உருவாக்கி வைக்கப்பட்டு, அதன் மூலம் தங்கள் அமைப்புக்கு ஆட்களை சேர்க்கும் அவர்களது உக்தி. இதன் மூலம் வீடியோக்களை பதிவேற்றம் செய்து, இளைஞர்களை ஈர்ப்பது தான அவர்களது இலக்கு.

இதற்கு டெலிகிராம் ஆஃப் மற்றும் சேனல்ஸ் அதாவது. "டெலிகிராம் சேனல்ஸ்" உள்ளிட்ட ஆஃப்-களை தீவிரவாத அனுதாபிகள் பயன்படுத்துகின்றனர் என தேசிய புலனாய்வு அமைப்பு, புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன.

தீவிரவாத அமைப்புகள், டெலிகிராம் ஆஃப்-யை பயன்படுத்துவது இது புதிது அல்ல. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ஹைதராபாத்தில் கைதான ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் அனுதாபியும் டெலிகிராம் ஆஃப்-யை பயன்படுத்தியவர் தான்.

அதேபோல், ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையதாக அண்மையில் கைது செய்யப்பட்ட ஹைதராபாத் இளைஞர்கள் ஐந்து பேரும் டெலிகிராம் ஆஃப்-யை பயன்படுத்தியுள்ளார்கள்.

பாதுகாப்பு வசதிகள், குறிபிட்ட நேரத்துக்கு குருஞ்செய்தியை அளிக்கும் நேர வசதி, பாதுகாப்பு குறியீடுகளுடன் செய்தி அனுப்பும் வசதிகள் இருப்பதால், டெலிகிராம் ஆஃப் உபயோகப்படுத்தப்படுகிறது என பாதுகாப்பு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி