ஆப்நகரம்

பள்ளிகளில் தெலுங்கு மொழி கட்டாயம்

தெலுங்கானா பள்ளிக்கூடங்களில் 1 முதல் 12 ம் வகுப்பு வரை தெலுங்கு மொழியை கட்டாய பாடமாக்கி முதல்வர் சந்திரசேகர்ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

TNN 14 Sep 2017, 5:04 am
தெலுங்கானா பள்ளிக்கூடங்களில் 1 முதல் 12 ம் வகுப்பு வரை தெலுங்கு மொழியை கட்டாய பாடமாக்கி முதல்வர் சந்திரசேகர்ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Samayam Tamil telugu language subject is compulsory for all schools says telungana cm
பள்ளிகளில் தெலுங்கு மொழி கட்டாயம்


தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர்ராவ் தலைமையில் அமைச்சர்கள் கூட்டம் நிறைவடைந்ததையடுத்து, முதல்வர் அலுவலகத்திலிருந்து செய்தி குறிப்பு ஒன்று வெளியானது.


அதில், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை தெலுங்கு மொழியை கட்டாய பாடமாக்க முதல்வர் சந்திரசேகர்ராவ் அறிவுறுத்தி உள்ளார்.


தெலுங்கு மொழியை கட்டாய பாடமாக்காத கல்வி நிறுவனங்களின் அனுமதி ரத்து செய்யப்படும் எனவும், ‘உருது’ மொழியை தேர்வு செய்யும் கல்வி நிறுவனங்கள், அதனை விருப்ப பாடமாக கற்றுக்கொடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.


தெலுங்கு மொழி பாடத்திற்கான பாடத்திட்டங்களை சாகித்ய அகாடமி தயார் செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டு உள்ளார்.


பாடத்திட்டங்கள் தயார் செய்யப்பட்டு, விரைவில் புத்தகங்கள் அச்சடிக்கப்படும் என தெரிவித்து உள்ள சந்திரசேகர்ராவ், கண்டிப்பாக இந்த பாடத்திட்டங்களின் அடிப்படையில் மட்டுமே மாணவர்களுக்கு பாடம் கற்று தர வேண்டும் என தெரிவித்து உள்ளார்.


மாறாக கல்வி நிறுவனங்கள் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு பாடத்திட்டங்களை தயார் செய்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.


மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் விளம்பர பலகைகளில் கட்டாயம் தெலுங்கு மொழி இடம் பெறவேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது.

அடுத்த செய்தி