திருவனந்தபுரம்: சபரிமலையில் குவியும் பக்தர்களின் வருகை அதிகரிப்பை ஒட்டி, நாள்தோறும் கோவிலை திறக்க வேண்டும் என்ற முதல்வர் பினராய் விஜயனின் கருத்துக்கு கோவில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை கோவிலில் 2 மாதங்களில் மண்டல பூஜைகள் தொடங்க உள்ளன. இந்நிலையில் சபரிமலை பக்தர்கள் வசதிக்காக செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து, முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பம்பையில் உள்ள கணபதி கோவிலில் நடைபெற்ற கூட்டத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சுரேந்திரன், திருவிதாங்கூர் கோவில் நிர்வாக தலைவர் கோபால கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய பினராயி விஜயன், சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக ஓய்வறைகள், குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்துதர வேண்டும் என்று தெரிவித்தார். திருப்பதி கோவிலைப் போல வி.ஐ.பி தரிசன கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், நாள்தோறும் கோவில் நடையை திறக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இதற்கு திருவிதாங்கூர் கோவில் நிர்வாக தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சபரிமலை ஐயப்பன் ஏற்றத் தாழ்வுகள் பாராதவர் என்றும், நாள்தோறும் நடையை திறப்பது ஆகம விதிகளுக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டார்.
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை கோவிலில் 2 மாதங்களில் மண்டல பூஜைகள் தொடங்க உள்ளன. இந்நிலையில் சபரிமலை பக்தர்கள் வசதிக்காக செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து, முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பம்பையில் உள்ள கணபதி கோவிலில் நடைபெற்ற கூட்டத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சுரேந்திரன், திருவிதாங்கூர் கோவில் நிர்வாக தலைவர் கோபால கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய பினராயி விஜயன், சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக ஓய்வறைகள், குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்துதர வேண்டும் என்று தெரிவித்தார். திருப்பதி கோவிலைப் போல வி.ஐ.பி தரிசன கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், நாள்தோறும் கோவில் நடையை திறக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இதற்கு திருவிதாங்கூர் கோவில் நிர்வாக தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சபரிமலை ஐயப்பன் ஏற்றத் தாழ்வுகள் பாராதவர் என்றும், நாள்தோறும் நடையை திறப்பது ஆகம விதிகளுக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டார்.