ஆப்நகரம்

மோகன்லால் செய்த காரியம்: கோயில் ஊழியர்களுக்கு நேர்ந்த கதி!

குருவாயூர் கோயில் வாசல் வரை பிரபல நடிகர் மோகன்லாலின் காரை அனுமதித்த, கோயில் ஊழியர்கள் 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 13 Sep 2021, 9:31 am
மலையாள நடிகர் மோகன்லால் தனது மனைவியுடன் சில தினங்களுக்கு முன் குருவாயூர் கோயிலில் தரிசனம் செய்வதற்காக சென்றார்.
Samayam Tamil mohanlal


அப்போது, அவருடைய கார் கோயிலின் பிரதான நுழைவாயில் வரை செல்ல அனுமதிக்கப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கோயில்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, பிரசித்தி பெற்ற குருவாயூர் மற்றும் சபரிமலை ஐயப்பன் கோயில்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
40 சதவீதம் மேல் சம்பள செலவினம் கூடாது: இணை ஆணையர்களுக்கு பறந்த உத்தரவு!
அத்துடன் பாதுகாப்பு கருதி கடந்த பல ஆண்டுகளாக குருவாயூர் கோயில் வளாகத்திற்குள் எந்த வாகனமும் அனுமதிக்கப்படுவதில்லை.

இந்நிலையில், மோகன்லால் தனது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்ய வந்தபோது அவரது வாகனம் கோயில் வளாகத்துக்குள் சென்றது. தடையை மீறி அவரது வாகனத்தை அனுமதித்ததால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 ஊழியர்களை கோயில் நிர்வாக அதிகாரி பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி