ஆப்நகரம்

சபரிமலை போல் இந்த கோயிலிலும் பெண்களுக்கு அனுமதி இல்லையாம்; கிளம்பியது புதிய சர்ச்சை

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவது தொடர்பான சர்ச்சைகள் நடந்து வரும் சூழ்நிலையில் கர்நாடகாவில் உள்ள ஒரு கோயிலிலும் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 5 Dec 2018, 1:02 pm
கேரள மாநிலத்தில் பிரபலமான தர்மசாஸ்தா சபரிமலை ஐயப்பன் கோவில் சமீப காலமாக சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறது. சபரிமலை கோவிலுக்கு இது நாள் வரை 10 வயது முதல் 50 வயது உடைய பெண்கள் செல்லதடை எழுதப்படாத தடை ஒன்று உள்ளது.
Samayam Tamil karnataka temple


இந்த தடைக்கான உண்மையான காரணம் என குறிப்பிட்டு சொல்லிவிட முடியாவிட்டாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை சொல்லுகின்றனர். இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது.

இந்த உத்தரவு பக்தர்களை கோபமடைய செய்தது. உடனடியாக பக்தர்கள் பலர் போராட்டத்தில் குதித்தனர். சில பெண்கள் சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்பதில் உறுதி கொண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல போலீஸ் உதவியை நாடினர்.

இதையடுத்து பாத்திமா ரைஹானா உள்ளிட்ட சில பெண்ணிய ஆர்வலர்கள் போலீசாரின் பாதுகாப்புடன் சபரிமலைக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த பெண்கள் சபரிமலைக்கு செல்ல பக்தர்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். அதன் சன்னிதானம் வரை சென்ற பெண்கள் திரும்பி வர கேரள அரசு உத்தரவிட்டது. அதனால் அவர்களும் சபரிமலைக்குள் செல்லவில்லை.

இந்நிலையில் இன்றும் சபரிமலைக்கு பெண்கள் செல்வது தொடர்பான சர்ச்சை நடந்து வருகிறது. இதற்கிடையில் தற்போது கர்நாடக மாநிலத்திலும் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள கோவில் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கர்நாடக - தமிழ்நாடு எல்லையில் கர்நாடக மாநிலத்திற்குட்பட்டபகுதியில் சாம்ராஜநகர் பகுதியில் கொங்கள்ளி மல்லிகார்ஜூனா சுவாமி கோவில் உள்ளது. இது மைசூருவில் இரு்து சமார் 98 கி.மீ தொலைவில் மலைப்பகுதியில் அடர்ந்த காடுகளுக்கு இடையே இருக்கிறது.

இந்த கோவில் குறித்து அந்தகோவில் ஐயர் சதாசிவ மூர்த்தி கூறியதாவது : "கொங்கள்ளி மல்லிகார்ஜூனா கோவிலுக்கு சுமார் 1200 ஆண்டு கால வரலாறு இருக்கிறது. இந்த கோவிலில் இன்று வரை ஒரு பெண் கூட அனுமதிக்கப்படவில்லை.

இந்த மல்லிகாஜூன சுவாமி என்பவர் தென் கர்நாடகா பகுதி மக்களால் வழிபடப்படும் மகாதேவஸ்வரா சுவாமியாவார். வரலாற்றுப்படி மல்லிகார்ஜூன சுவாமி இந்த மலைக்கு தவம் செய்வதற்காக இந்த மலைக்கு வந்து தவம் மேற்கொண்டு இங்கேயே தெய்வமானவர். இவர் தவம் செய்ய வரும் போது பெண்கள் அந்த பகுதிக்கு வந்தால் அவரது தவம் கலையும் என்பதற்காக பெண்கள் அந்த பகுதிக்க வர தடை விதித்தார். அது முதல் இங்கு பெண்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.

ஆனால் இந்த கோவிக்கான ஊர்வல திருவிழா கொங்கள்ளி கிராமத்தில் நடக்கும். அந்த திருவிழாவில் பெண்கள் கலந்து கொள்வார்கள். அவர்கள் இந்த கோவிலுக்கு வருவதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கோவில் அடர்ந்த காட்டு பகுதியில் இருக்கிறது. இங்கு புலி, சிறுத்தை, யானை, கரடி நடமாட்டம் அதிகமாக இருக்கும். அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இருக்காது இதனால் கூட பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருக்கலாம். " என கூறினார்.

இதுவரை உள்ள தகவலின் படி இந்த கோவிலுக்குள் பெண்கள் ஒரு போதும் அனுமதிக்கப்பட்டதும் இல்லை. எந்த பெண்ணும் இதுவரை கட்டாயமாக கோலுக்கும் நுழையவேண்டும் என கோரியதும் இல்லை.

ஆண்டுதோறும் இந்த கோயிலில் தீமிதி திருவிழா, ருத்ராபிஷேகம், புலி வாகன சேவா ஆகிய நிகழ்ச்சியில் விமர்சையாக நடந்து வருகிறது. சபரிமலை விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ள சூழ்நிலையில் கர்நாடகாவில் உள்ள ஒரு கோயிலிலும் பெண்கள் அனுமதிக்கப்படாத தகவல் தற்போது வெளியாகியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

அடுத்த செய்தி