ஆப்நகரம்

இந்தியாவுக்குள் ஊடுருவ 250 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முயற்சி! அடுத்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் ரெடி

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முகாமிட்டுள்ளதாக புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Samayam Tamil 27 Sep 2018, 12:52 pm
சுமார் 250 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ காஷ்மீர் பகுதியில் முகாமிட்டுள்ளதாக புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Samayam Tamil surgical strike


அண்மையில் பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பொறுப்பேற்றார். அவர் அங்கு பதவியேற்றதும், இந்தியா பாகிஸ்தான் இடையேயான நல்லுறவு மீண்டும் தொடரும் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். அதற்கேற்றார் போல், இம்ரான் கானும் பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால், இதனிடையே, காஷ்மீரில் மூன்று காவல்துறை அதிகாரிகளை பயங்கரவாதிகள் கடத்திச் சென்று படுகொலை செய்தனர். அதோடு மட்டும் இல்லாமல், பயங்கரவாதி புர்ஹான் வாணிக்கு அஞ்சல்தலையும் வெளியிட்டனர். இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது சுமார் 250 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முகாமிட்டுள்ளதாக புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் எட்டு இடங்களில் முகாமிட்டுள்ளதாகவும், 27 நிலைகள் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ உள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எட்டு முகாம்களில், இரண்டு இடங்கள் ஏற்கனவே, இந்தியா நடத்திய சர்ஜிக்கல் தாக்குதலில் தகர்க்கப்பட்டது. தற்போது பயங்கரவாதிகள் மீண்டும் அதனை சரிசெய்து முகாமிட்டுள்ளனர். உளவுத்துறையின் இந்த எச்சரிக்கை தகவலையடுத்து, இந்திய ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

ஏற்கனவே, இந்திய விமானப்படை தளபதி சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து பேசுகையில், ‘பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்துவதாக இருந்தால், அதில், விமானப்படையும் பங்கேற்கும் என்றும் இதன் மூலம், பாகிஸ்தானின் அணு ஆயுத மையத்தையும் தகர்க்க முடியும் என்றும் கூறியிருந்தார்.

அடுத்த செய்தி