ஆப்நகரம்

பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்புடைய 3 காலிஸ்தான் தீவிரவாதிகள் கைது

பஞ்சாப் மாநிலத்தில், தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த காலிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

TNN 4 Jun 2017, 10:48 pm
பஞ்சாப் மாநிலத்தில், தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த காலிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil terror module busted in punjab 3 isi linked khalistani militants arrested
பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்புடைய 3 காலிஸ்தான் தீவிரவாதிகள் கைது


பஞ்சாப் மாநிலத்தின் ஒரு பகுதியை பிரித்து, காலிஸ்தான் என்ற தனி மாநிலமாக அறிவிக்க, சில பிரிவினைவாத அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர். இவர்களுக்கு, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பல்வேறு உதவிகளை செய்கிறது.

எனினும், இந்தியாவில் காலிஸ்தான் தீவிரவாதிகளின் செயல்பாடு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாட்டியாலா பகுதியில் மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை தீவிரவாதிகள் நடத்த உள்ளதாக, தகவல் கிடைத்தது.

இதன்பேரில், போலீசார் அங்கே தேடுதல் பணி மேற்கொண்டு, 3 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரித்ததில், பாகிஸ்தானிய உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவியுடன், தாக்குதல் நடத்த, ஊடுருவியதாக தெரியவந்தது.

இதில், ஒருவனுக்கு ஐஎஸ்ஐ அமைப்பு நேரடியாக பயிற்சி வழங்கியும் உள்ளது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட 3 பேரையும் பலத்த காவலில் வைத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கையாக, தீவிரவாத தாக்குதல் தடுக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி