ஆப்நகரம்

சிஆர்பிஎஃப் வீரர்களை குறி வைத்து புல்வாமாவில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஓர் பள்ளி வளாகத்தில், மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினரை (சிஆர்பிஎஃப்) குறிவைத்து, பயங்கரவாதிகள் இன்று கண்மூடுத்தனமான தாக்குதல் நடத்தினர்.

Samayam Tamil 29 Oct 2019, 5:31 pm
ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் அமைதியை குலைக்கும் நோக்கில், இந்திய - பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதிகளில் அமைந்துள்ள ராணுவ நிலைகள், கிராமப்புறங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
Samayam Tamil scta.


மறுபுறம், பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ஜம்மு -காஷ்மீர் மாநிலத்துக்குள் ஊடுருவ பொதுமக்கள், பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

சோனாப்பூர் என்ற நகரின் பேருந்து நிலையத்துக்கு அருகே, பாதுகாப்புப் படையினரை குறித்து, பயங்கரவாதிகள் நேற்று(திங்கள்கிழமை) கையெறி குண்டு தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதலில் பத்துக்கும் மேற்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படையினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் படுகாயம் அடைந்தனர்.

பயங்கரவாதிகள் கைவரிசை... 15 பேர் படுகாயம்

இந்த நிலையில், புல்வாமா மாவட்டத்துக்குட்ட, திராப்கம் எனமிடத்தில் அமைந்துள்ள ஓர் பள்ளியில், பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வரும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களை (சிஆர்பிஎஃப்) குறிவைத்து, அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் இன்று கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

6-7 சுற்று வரை குண்டுகள் பாயும் வரை, துப்பாக்கியால் அவர்கள் சிஆர்பிஎஃப் வீரர்களை நோக்கி சுட்டுனர்.
இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை.

பல்வேறு அரசு பொதுத் தேர்வுகளை எழுதுவதற்கான தேர்வு மையமாக இந்தப் பள்ளி திகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 14 -ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில், 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி