ஆப்நகரம்

சி.ஆர்.பி.எப் முகாம் மீது தாகுதல் நடத்த வந்த தீவிரவாதிகள் விரட்டியடிப்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் சி. ஆர்.பி.எப் முகாம் மீது தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் விரட்டியடித்துள்ளனர்.

Samayam Tamil 12 Feb 2018, 9:33 pm
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் சி. ஆர்.பி.எப் முகாம் மீது தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் விரட்டியடித்துள்ளனர்.
Samayam Tamil terrorist attacks the crpf camp were chased away
சி.ஆர்.பி.எப் முகாம் மீது தாகுதல் நடத்த வந்த தீவிரவாதிகள் விரட்டியடிப்பு!


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் சஞ்சுவான் ராணுவ முகாமின் குடியிருப்பு பகுதி வழியாக புகுந்த தீவிரவாதிகள் நடத்திய தீடீர் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் ஒருவர் உயிரிழந்தனர். 4 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஸ்ரீநகரில் உள்ள சி.ஆர்.பி.எப் முகாம் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் இன்று முயற்சி செய்துள்ளனர். சி. ஆர்.பி.எப். முகாம் நோக்கி இரண்டு நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் ஏ.கே-47 ரக துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் வந்ததால், உஷாரான காவலாளிகள் அவரகளை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதையடுத்து தீவிரவாதிகள் அப்பகுதியில் இருந்து தப்பி ஓடினர்.

இதையடுத்து சி.ஆர்.பி.எப், முகாமை சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. முகாமிற்குள்ளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

அடுத்த செய்தி