ஆப்நகரம்

எல்லையில் வம்பு பண்ணும் பாகிஸ்தான்; பகீர் செய்தி சொல்லும் ராணுவத் தளபதி!

இந்தியாவிற்குள் ஊடுருவுவதை மிகவும் தீவிரமான வேலையாக பாகிஸ்தான் வைத்திருப்பதாக ராணுவ தளபதி குற்றம்சாட்டியுள்ளார்.

Samayam Tamil 29 Nov 2020, 11:26 am
கேரள மாநிலம் எழிமலாவில் உள்ள இந்திய நேவல் அகாடமியில் நடந்த நிகழ்ச்சியில் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவனே கலந்து கொண்டார். அங்கு பேசுகையில், இந்தியாவின் மேற்கு எல்லைப் பகுதியில் தற்போது நடந்து கொண்டிருக்கும் விஷயம் மிகவும் மோசமானது. தொடர்ச்சியான பயங்கரவாத செயல்பாடுகள் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. விரைவில் குளிர்காலம் வரவுள்ளது. இதன் காரணமாக மலைகள் அனைத்தும் பனியால் மூடப்படும்.
Samayam Tamil MM Naravane


இது பயங்கரவாதிகளுக்கு பெரிய வாய்ப்பாக அமைந்துவிடும். பாகிஸ்தான் மிகத் தீவிரமாக ஜம்மு காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்யும். இதுபோன்ற நடவடிக்கைகளில் தான் கடந்த காலங்களிலும் ஈடுபட்டது.

சர்வதேச எல்லைப் பகுதியில் சுரங்கப் பாதைகள் அமைத்து பலமுறை ஊடுருவி இருக்கிறது. இந்தியா தற்போது பல்வேறு வகைகளிலும் ஊடுருவல்களைச் சந்தித்து வருகிறது. நமது வீரர்கள் எல்லையில் அரண் போன்று செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

புதுசா போட்டுத் தாக்கும் கொரோனா; லே பகுதியில் இப்படியொரு ஊரடங்கு!

நடப்பாண்டில் மட்டும் 778 கிலோமீட்டர் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் 4,100 முறை எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. இது கடந்த 2003ஆம் ஆண்டிற்கு பிறகு அதிகபட்ச எண்ணிக்கை ஆகும்.

கடந்த 2017ல் 971ஆகவும், 2018ல் 1,629ஆகவும் பதிவாகி இருந்தது. 2019ல் பாலகோட் வான்வெளி தாக்குதல், ஜம்மு காஷ்மீர் பிரிவினை, சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து ஆகியவற்றால் 3,168 முறை பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி