ஆப்நகரம்

நாட்டின் முக்கிய இடங்களில் ரசாயனத் தாக்குதல்; தீவிரவாதிகள் ரகசிய திட்டம்!

முக்கிய இடங்களில் ரசாயனத் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் ரகசிய திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத் துறை நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

TNN 9 Sep 2017, 6:23 pm
டெல்லி: முக்கிய இடங்களில் ரசாயனத் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் ரகசிய திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத் துறை நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
Samayam Tamil terrorists planning chemical attacks
நாட்டின் முக்கிய இடங்களில் ரசாயனத் தாக்குதல்; தீவிரவாதிகள் ரகசிய திட்டம்!


மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ நிலையங்கள் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பை பலப்படுத்த வலியுறுத்தியுள்ளது.

தீவிரவாதிகள் ரசாயன தாக்குதல் நடத்த ரகசிய திட்டம் தீட்டியிருப்பதாக கூறியுள்ளது. குறிப்பாக போக்குவரத்து நிலையங்களின் மீது பயங்கர தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

அதிநவீன யுக்திகளை கையாண்டு தாக்குதல் நடத்தக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனிநபர் உடைமைகள், எலக்ட்ரிக் சாதனங்கள், சிறிய அளவிலான பொருட்களில் வெடிபொருட்கள் வைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்பெயினில் இருந்து மும்பை விமான நிலையம் வந்த சரக்கு விமானத்தில் துப்பாக்கி போன்ற பொருளை கண்டுபிடித்தனர்.

அது ஜெய்ப்பூர் செல்ல வேண்டிய பார்சல் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அதைக் கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Terrorists planning chemical attacks on airports, railway stations, warn intel agencies.

அடுத்த செய்தி