ஆப்நகரம்

கல்காத்தாவில் தாய்லாந்து பெண் பலி... கொரோனா வைரஸ் தாக்குதலா?

நோயாளியின் சோதனை மாதிரிகளை புனேவில் தேசிய வைரஸ் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தது கல்கத்தாவில் உள்ள ஐ.டி. மருத்துவமனை.

Samayam Tamil 28 Jan 2020, 11:10 pm
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிக உயிர்பலிகளை வாங்கவில்லை என்றாலும், பரவல் அதிகமாக வாய்ப்பிருக்கிறது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.
Samayam Tamil id kolkata hospitals


இந்நிலையில், 32 வயது மதிக்கத்தக்க தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நோயாளி ஒருவர் இறந்ததும், 28 வயது மதிக்கத்தக்க சீனப் பெண் ஒருவர் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுவதும் நகரமெங்கும் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

சீனப் பெண், கடந்த 24ஆம் தேதிதான் மும்பை வந்து இறங்கியுள்ளார். அங்கிருந்து கல்கத்தாவுக்கு ரயிலில் போவதாகத் திட்டம். இதற்கிடையில், காய்ச்சலும், அடிவயிற்று வலியும் உடன் தலைவலியும் இருந்ததால் அவரது நண்பர் அவரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து டனடியாக அவரை ஐ.டி.மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அவசர அவசரமாக அவர் தனி வார்டுக்கு ஒதுக்கப்பட்டு, ஸ்வஸ்த்யா பவனிலிருந்து மருத்துவக்குழு வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

அபிஜித் பானர்ஜிக்கு கவுர டாக்டர் பட்டம்; மாணவர்கள் எதிர்ப்பால் வெளியேறிய ஆளுநர்!

ஹூவாமின் 5 மாதங்களுக்கு முன்பு சீனாவிலிருந்து கிளம்பியதாகவும் தெரிவித்திருந்தார். ஐ.டி. மருத்துவமனையின் மருந்துக்குழு தலைவர் தபான் பிஸ்வாஸ் இவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என்பதைக் கண்டறிந்தார்.

ஆனால், தாய்லாந்தைச் சேர்ந்த பெண் சுரின் நாக்டாய் ஜனவரி 21ஆம் தேதி கடுமையான மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு ரூபி மருத்துவமனையின் அவசரகாலப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சைப் பலனின்றி சுமார் 5 மணியளவில் உயிரிழந்தார். நோயாளியின் சோதனை மாதிரிகளை புனேவில் தேசிய வைரஸ் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தது கல்கத்தாவில் உள்ள ஐ.டி. மருத்துவமனை.

இவரது உடலிலிருந்து சோதனை மாதிரிகள் சுகாதாரத்துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. நாடு முழுக்க பரபரப்பு அதிகமாகி இருக்கும் இந்த சூழலில், இந்த இறப்பு மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

அடுத்த செய்தி