ஆப்நகரம்

பள்ளிச்சிறுமியை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்தவருக்கு ஓராண்டு சிறை!

பள்ளிச்சிறுமியை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்தவருக்கு ஓராண்டு சிறை!

TNN 21 Mar 2017, 5:41 pm
தானே : உத்தன் பகுதியை சேர்ந்த ஸ்விடன் கிரேஷன் கொலாசோ எனும் இளைஞர் அதே பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுக்கு படிக்கும் சிறுமியை, பள்ளிக்கும் செல்லும் போது பின் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி தனது விடுமுறை நாட்களில் தனது மாமா வீட்டிற்கு டிவி பார்க்க செல்லும் போது கிரேஷன் சிறுமியை அங்கு பார்த்துள்ளார். சிறுமியின் மாமாவுடைய படகில் தான் கிரேஷன் பணி புரிந்து வந்தார். சிறுமி செல்லும் இடமெல்லாம், கிரேஷன் பின்தொடரவே இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு இருவரும் பொதுவான இடத்தில் சந்தித்து கொள்ளும் போதெல்லாம் சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.
Samayam Tamil thane man gets one year in jail for stalking schoolgirl
பள்ளிச்சிறுமியை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்தவருக்கு ஓராண்டு சிறை!


கடந்த வருடம் ஆகஸ்ட் 26ஆம் தேதி, சிறுமியின் பள்ளிக்கு அருகில் கிரேஷன் சிறுமியை பாலியல் கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். அதன்பிறகு சிறுமியை தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சி செய்துள்ளார். இதனால் சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் கிரேஷனை கைது செய்தனர். சிறுமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் குற்றம் சாட்டப்பட்டுள்ள கிரேஷனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி