ஆப்நகரம்

Pulwama Attack: புல்வாமாவில் துப்பாக்கிச்சூடு தாக்குதல்: 4 ராணுவ வீரர்கள் வீரமரணம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்ம், பாதுகாப்பு படைவீரர்களுக்கும் இடையில் நடந்த என்கவுண்டர் தாக்குதலில் மேஜர் உள்பட 4 இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

Samayam Tamil 18 Feb 2019, 11:47 am
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்ம், பாதுகாப்பு படைவீரர்களுக்கும் இடையில் நடந்த என்கவுண்டர் தாக்குதலில் மேஜர் உள்பட 4 இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
Samayam Tamil pulwama


கடந்த 14ம் தேதி அன்று, ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது, வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதி, பயங்கரவாதிகள் தற்கொலைபடை தாக்குதல் நடத்தியதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது.

Also Read This: Pulwama Attack: புல்வாமாவில் துப்பாக்கிச்சூடு தாக்குதல்: 4 ராணுவ வீரர்கள் வீரமரணம்!


இந்த நிலையில், இந்த சம்பவத்திலிருந்து மீள்வதற்குள் புல்வாமா மாவட்டத்தில் மற்றொர் தாக்குதல் நடந்துள்ளது. புல்வாமா மாவட்டத்தின் பின்க்லான் பகுதியில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் இடையில் நடந்த என்கவுண்டர் தாக்குதலில் மேஜர் உள்பட 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வீர மரணம் அடைந்த வீரர்கள் 55 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி