குஜராத் மாநிலத்தில் வீட்டுப்பாடம் எழுதாமல் பள்ளிக்கு வந்த மாணவனை தாக்கிய ஆசிாியா் மீது அம்மாநில காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்னா் காலை வகுப்புகள் தொடங்கின. வகுப்பு தொடங்கிய சிறிது நேரத்தில் ஆசிரியர் மாணவர்களின் வீட்டுப் பாடங்களை சரிபார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, 8 வயது மாணவன் ஒருவன் வீட்டுப் பாடம் எழுதாதது தெரிய வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர், ஏன் வீட்டுப் பாடம் எழுதவில்லை? என கேட்டு மாணவனை பிரம்பால் தாக்கியுள்ளார்.
இதில் மாணவனின் முதுகில் பிரம்பு தளும்புகள் அச்சாக பதிந்தது. இதையடுத்து அந்த சிறுவன் அழுது கொண்டே வீட்டுக்கு சென்று, பள்ளியில் நடந்ததை பெற்றோரிடம் கூறினான்.
இதுதொடர்பாக, மாணவனின் பெற்றோர் அப்பகுதயில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். காவல் துறையினர் விசாரணை நடத்தி, பள்ளியில் இருந்த கண்காணிப்பு கேமராவை சோதனை செய்தனர். அதில் ஆசிரியர் மாணவனை பிரம்பால் அடிப்பது பதிவாகி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆசிரியர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்னா் காலை வகுப்புகள் தொடங்கின. வகுப்பு தொடங்கிய சிறிது நேரத்தில் ஆசிரியர் மாணவர்களின் வீட்டுப் பாடங்களை சரிபார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, 8 வயது மாணவன் ஒருவன் வீட்டுப் பாடம் எழுதாதது தெரிய வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர், ஏன் வீட்டுப் பாடம் எழுதவில்லை? என கேட்டு மாணவனை பிரம்பால் தாக்கியுள்ளார்.
இதில் மாணவனின் முதுகில் பிரம்பு தளும்புகள் அச்சாக பதிந்தது. இதையடுத்து அந்த சிறுவன் அழுது கொண்டே வீட்டுக்கு சென்று, பள்ளியில் நடந்ததை பெற்றோரிடம் கூறினான்.
இதுதொடர்பாக, மாணவனின் பெற்றோர் அப்பகுதயில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். காவல் துறையினர் விசாரணை நடத்தி, பள்ளியில் இருந்த கண்காணிப்பு கேமராவை சோதனை செய்தனர். அதில் ஆசிரியர் மாணவனை பிரம்பால் அடிப்பது பதிவாகி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆசிரியர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.