ஆப்நகரம்

வழக்குகளை ஒதக்கீடு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கே – உச்சநீதிமன்றம்

வழக்குகளை யாருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற அதிகாரம் தலைமை நீதிபதிக்கே உள்ளது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 6 Jul 2018, 11:54 am
வழக்குகளை யாருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற அதிகாரம் தலைமை நீதிபதிக்கே உள்ளது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Deepak Mishra


கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படுவதாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சக நீதிபதிகள் 4 போ் வெளிப்படையாக குற்றம் சாட்டினா். வரலாற்றில் முதல் முறையாக செய்தியாளா்களை சந்தித்து நீதிபதிகள் இத்தகைய புகாரை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடா்ந்து முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான சாந்தி பூஷண் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தாா். அந்த மனுவில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கு வழக்கை ஒதுக்கீடு செய்வதற்காகவும், நீதிபதிகள் அடங்கிய அமா்வுகளை உருவாக்குவதற்கும் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தாா்.

இந்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் வேணுகோபால் அமா்வு இன்று தீா்ப்பளித்துள்ளது. இதில், வழக்கு ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டுமே உள்ளது. நீதிபதிகள் அனைவருக்கும் தலைமை நீதிபதி தான் தலைவா். வழக்குக்காக கொலிஜியம் தினமும் ஒதுக்கீடு செய்தால் பணிக்சுமை மேலும் அதிகரிக்கும் என்று தொிவித்துள்ளனா்.

அடுத்த செய்தி