ஆப்நகரம்

பிழைக்குமா கர்நாடகா அரசு...குழப்பத்திற்கு இடையே இன்று கூடியது சட்டமன்றம்!!

கர்நாடகா சட்டமன்றக் கூட்டம் இன்று துவங்கும் நிலையில் மதஜ, காங்கிரஸ் மற்றும் பாஜக எம்.எல்.ஏ.,க்கள் அவைக்கு வந்துள்ளனர். மதஜ, காங்கிரஸ் கூட்டணி அரசு நீடிக்குமா என்று தெரியாத நிலையில், இன்றே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று பாஜக கடிதம் கொடுத்துள்ளது.

Samayam Tamil 15 Jul 2019, 12:48 pm
கர்நாடகா அரசியலில் தொடர்ந்து பல மாதங்களாக புயல் வீசி வருகிறது. மஜத, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த வாரம் திடீரென மஜத கட்சியில் இருந்து 3 எம்.எல்.ஏ.,க்களும், காங்கிரஸ் கட்சியில் இருந்து 13 எம்.எல்.ஏ.,க்களும், சுயேட்சையைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ.,க்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்து மும்பை சென்றனர்.
Samayam Tamil Karnataka n 1


இந்த நிலையில், பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாகராஜ் வீட்டுக்கு கடந்த சனிக்கிழமை காங்கிரஸ் தலைவர்கள் சென்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், திரும்பவும் காங்கிரசுக்கு வருவதாக உத்தரவாதம் அளித்து இருந்தார். இந்த நிலையில் மும்பை சென்ற நாகராஜ் திடீரென மீண்டும் ராஜினாமா திரும்ப பெற மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.

இதனால் மீண்டும் காங்கிரஸ், மஜத கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 18 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்து இருப்பதால், இந்த ஆட்சி நீடிப்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தனது பலத்தை நிரூபிக்க நம்பிக்கையிலா தீர்மானம் கொண்டு வர முதல்வர் ஹெச்டி குமாரசாமியும் இசைவு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் 78 எம்.எல்.ஏ.,க்கள், மஜதவில் 37 எம்.எல்.ஏ.,க்கள், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ., என மொத்தம் 116 எம்.எல்.ஏ.,களின் ஆதரவு மஜத, காங்கிரஸ் கூட்டணிக்கு இருந்தது. தற்போது 16 எம்.எல்.ஏ.,க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் கூட்டணி ஆட்சியின் பலம் 100ஆகக் குறையும்.
தற்போது பாஜகவில் 105 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறிய இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள் தற்போது பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து பாஜகவின் பலம் அவையில் 107 ஆக அதிகரிக்கிறது. காங்கிரஸ் கூட்டணியின் பலம் 100 குறையும். இந்த நிலையில், பாஜக ஆட்சி அமைக்க முயற்சிக்கலாம். கவர்னரை சந்தித்து மனு கொடுக்கலாம்.
காங்கிரஸ் கட்சியில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.,க்களை சந்தித்துப் பேசுவதற்கு அந்தக் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மும்பை செல்வதாக இருந்தது. இந்த நிலையில் தங்களை சந்திக்க வரும் குலாம் நபி ஆசாத் மற்றும் கர்நாடகா மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனே கார்கேவை சந்திக்க விருப்பமில்லை என்றும் தங்களுக்கு இவர்களால் அச்சுறுத்தல் இருக்கிறது என்று ராஜினாமா செய்த காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்துள்ளனர்.

இதைப் பயன்படுத்தி அவையில் இன்றே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இதற்கான முடிவு சபாநாயகரின் கையில் உள்ளது.
காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்த எம்.எல்.ஏ., ராமலிங்க ரெட்டி தான் இன்னும் பெங்களூருவில் தான் இருப்பதாகவும், மும்பை சென்றதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி