ஆப்நகரம்

என் வீட்டை ஏன் இடிச்சீங்க? அதிகாரியை ரவுண்டு கட்டும் பசு மாடு!

வருவாய் மண்டல அதிகாரியை விரட்டிச் சென்று நீதி கேட்கும் பசு மாடு சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Samayam Tamil 3 Aug 2020, 9:02 am
திரைப்படங்களில் வில்லன்களால் பாதிக்கப்படும் விலங்குகள் அவர்களைத் துரத்திச் சென்று பலி வாங்குவது போல தெலங்கானாவில் அதிகாரி ஒருவரை பசுமாடு குறி வைத்து துரத்தி வருகிறது.
Samayam Tamil cow that chases the revenue zonal officer in telangana


தெலங்கானாவில் உள்ள வனபார்த்தி பகுதியில் ஆக்கிரமிப்பு என்ற பேரில் அங்கிருந்த கோசாலை அகற்றப்பட்டது. இதனால் அங்கிருந்த மாடுகள் அப்புறப்படுத்தப்பட்டன.

கோசாலையை அகற்ற உத்தரவிட்ட மணடல வருவாய் அலுவலர் தற்போது பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகிறார். கோசாலை அகற்றப்பட்டதால் தாங்கள் தங்க இடம் இல்லாத நிலையில் பாதிக்கப்பட்ட பசு மாடு ஒன்று அதிகாரி எங்கு சென்றாலும் பின்னாலே துரத்தி கொம்புகளால் முட்ட வருகிறது.

சுவையான ’கோவிட் கறி’, ’மாஸ்க் நான்’ ரெடி - சாப்பிட வரலாம் வாங்க!

காலையில் அவர் வீட்டு வாசலில் வந்து நிற்கும் மாடு அவரைத் துரத்த தொடங்குகிறது. காரில் ஏறி தப்ப முயன்றாலும் காரை துரத்திக் கொண்டே பின்னால் ஓடுகிறது. எங்கு சென்றாலும் விடமாட்டேன் என்பது போல் அதிகாரியை மாடு துரத்தும் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘வாயில்லா ஜீவன் எல்லாம் வஞ்சி வஞ்சி பலி வாங்குதே’ என கோயில் திரைப்படத்தில் வடிவேலு தெறித்து ஓடுவது போல் அதிகாரி தப்பித்து ஓடினாலும் பசு மாடு விடுவதாய் இல்லை. இதனால் அதிகாரி வீட்டிலேயே முடங்கியுள்ளார்.

'மேலயா கை வைக்கிற' இளம்பெண்ணின் உதை தாங்காமல் தெறித்து ஓடிய வாலிபர்..!

தனது கன்றுக்காக மனுநீதி சோழனிடம் நீதி கேட்டுச் சென்ற பசுவைப் போல் இந்த பசு மாடும் விடாமல் துரத்திச் செல்கிறது. மனுநீதி சோழனைப் போல் இப்போதுள்ள அதிகாரிகள் நீதி வழங்குவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த செய்தி