பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ் குமாரால் இன்று திறக்கப்படவிருந்த அணையின் ஒரு பகுதி , நேற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள பகல்பூரில் 389 கோடி ரூபாய் செலவில் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையை பீகார் மாநில முதல்வர் இன்று திறந்து வைக்க இருந்தார்.
ஆனால் அவர் திறந்து வைக்கும் முன்னரே வெள்ளத்தில் அணை அடித்து செல்லப்பட்டது .
வெள்ளம் முழு வேகத்தில் வந்ததால்தான் அணை அடித்து செல்லப்பட்டுள்ளதாக , ந்த மாநில நில நீர் வளத்துறை அமைச்சர் லல்லன் சிங் தெரிவித்துள்ளார். புதிதாக கட்டப்பட்ட அணை பகுதிக்கு எதுவும் நேரவில்லை, பழைய பகுதிதான் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால், இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஊழல் ஆட்சி நிர்வாகமே காரணம் என பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
மேலும் அணை கட்டுவதே வெள்ளத்தை தடுப்பதற்காகத்தான். ஆனால் கட்டிய அணையே வெள்ளத்தில் அடித்து செல்வது இதுவே முதல்முறை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
the dam yet to be opened today by nitish kumar was washed off by flood
பீகார் மாநிலத்தில் உள்ள பகல்பூரில் 389 கோடி ரூபாய் செலவில் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையை பீகார் மாநில முதல்வர் இன்று திறந்து வைக்க இருந்தார்.
ஆனால் அவர் திறந்து வைக்கும் முன்னரே வெள்ளத்தில் அணை அடித்து செல்லப்பட்டது .
வெள்ளம் முழு வேகத்தில் வந்ததால்தான் அணை அடித்து செல்லப்பட்டுள்ளதாக , ந்த மாநில நில நீர் வளத்துறை அமைச்சர் லல்லன் சிங் தெரிவித்துள்ளார். புதிதாக கட்டப்பட்ட அணை பகுதிக்கு எதுவும் நேரவில்லை, பழைய பகுதிதான் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால், இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஊழல் ஆட்சி நிர்வாகமே காரணம் என பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
மேலும் அணை கட்டுவதே வெள்ளத்தை தடுப்பதற்காகத்தான். ஆனால் கட்டிய அணையே வெள்ளத்தில் அடித்து செல்வது இதுவே முதல்முறை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
the dam yet to be opened today by nitish kumar was washed off by flood