ஆப்நகரம்

தாலியின் மஞ்சள் ஈரம் கூட காயவில்லை, கணவன் முன்பு மனைவிக்கு நேர்ந்த உச்சகட்ட சோகம்...

திருமணம் நடந்து முடிந்த மறுநாள் மணப்பெண் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 2 Dec 2019, 8:37 pm
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது கருடாகாண்டி கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்த கோபிநாத்திற்கு தமயந்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்தது.
Samayam Tamil தாலியின் மஞ்சள் ஈரம் கூட காயவில்லை, கணவன் முன்பு மனைவிக்கு நேர்ந்த உச்சகட்ட சோகம்...


உறவினர்கள், நண்பர்கள் சூழ நடைபெற்ற இல்லத் திருமண விழாவின் அனைத்து சடங்குகளும் முடிந்த பின்பு மணப்பெண்ணை மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர்.

பெண் மருத்துவரைக் கொன்ற குற்றவாளிகளுக்கு சிறையில் மட்டன் உணவு!!

அப்போது தமயந்தி தனது பெற்றோரிடம் ஆசி பெற்றுகொண்டு கணவனோடு புறப்பட்டார். இந்நிலையில் சற்றும் எதிர்பாராதவாறு அவர் தரையில் மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த இரு வீட்டாரும் அவரை மீட்டு பாலசா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆசிரமத்திற்கு ஆப்பு வைத்த மாவட்ட நிர்வாகம்; எஸ்கேப் மோடில் ஜாலியாய் இருக்கும் நித்யானந்தா!

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மணப்பெண் ஏற்கெனவே இறந்து விட்டதாக அறிவித்தனர். பின்னர் மரணத்தின் காரணத்தை குறித்து கூறுகையில் தமயந்தி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்தது.

குஜராத்தில் 'பணமழை'.! 90 லட்சத்தை அள்ளி வீசிய மாப்பிள்ளை... வியக்க வைக்கும் வீடியோ...

ஆயிரம் கனவுகளோடு திருமணம் செய்துகொண்ட தம்பதிகளின் முடிவு இத்தனை சோகம் நிறைந்ததாக இருக்கும் என அறிந்திடாத உறவினர்களும், கணவன் கோபிநாத்தும் கதறி அழுத சம்பவம் காண்போரின் நெஞ்சை உருக்கியது.

அடுத்த செய்தி