ஆப்நகரம்

ஆக்ஸிஜன் இன்றி பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 63ஆக உயர்வு?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ஸிஜன் இன்றி பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

TNN 12 Aug 2017, 1:26 pm
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ஸிஜன் இன்றி பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
Samayam Tamil the death numbers of up hospital has gone from 30 to 63
ஆக்ஸிஜன் இன்றி பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 63ஆக உயர்வு?


இது தொடர்பாக அவசர அலோசனைக்கூட்டம் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் இன்று நடந்தது. காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கோரக்பூர் தொகுதி அம்மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியாகும். இந்த தொகுதியில் அரசுக்கு சொந்தமான பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூாி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இங்கு குழந்தைகளுக்கான பிரத்யேக அவசர சிகிச்சை வார்டில், மூளை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் திடீரென ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, 30 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

இதுகுறித்து விசாரணை நடத்திய அம்மாவட்ட நீதிபதி ராஜீவ் ரவுதலா, ஆக்சிஜன் பற்றாக்குறையால்தான் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உறுதிபடுத்தியுள்ளாா்.

இது தொடா்பான பிரச்சினையில் மருத்துவமனை நிா்வாகம் ஆக்சிஜன் விநியோகம் செய்யும் நிறுவனத்திற்கு ரூ.67 லட்சம் வரை பாக்கி வைத்திருந்ததால் அந்நிறுவனம் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்யும் உபகரணங்களை வழங்கவில்லை என்று தெரிகிறது. ரூ. 67 லட்சம் ரூபாய் பாக்கி வைக்கப்பட்ட காரணத்தால் கடந்த இரண்டு நாட்களில் 63 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைக் கண்டித்தும், முதல்வர் இதற்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

இந்த விபத்தில் எத்தனை குழந்தைகள் இறந்தனர் என்பது குறித்த உறுதியான தகவல்கள் இல்லாததால், 30 பேரா? 63 பேரா? என்ற குழப்பம் நிலவி வருகிறது.

அடுத்த செய்தி