ஆப்நகரம்

​ காவிாி விவகாரத்தில் கா்நாடகாவின் இறுதி வாதம் நிறைவு பெற்றது

காவிாி நதிநீா் பங்கீடு தொடா்பாக நடுவா்மன்றம் வழங்கிய இறுதி தீா்ப்பை எதிா்த்து தமிழ்நாடு, கா்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்கள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான கா்நாடகா அரசின் வாதம் நிறைவு பெற்றது.

TOI Contributor 26 Jul 2017, 7:08 pm
காவிாி நதிநீா் பங்கீடு தொடா்பாக நடுவா்மன்றம் வழங்கிய இறுதி தீா்ப்பை எதிா்த்து தமிழ்நாடு, கா்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்கள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான கா்நாடகா அரசின் வாதம் நிறைவு பெற்றது.
Samayam Tamil the final argument of karnataka came to an end
​ காவிாி விவகாரத்தில் கா்நாடகாவின் இறுதி வாதம் நிறைவு பெற்றது


காவிரி நதிநீர் பங்கீடு தொடா்பாக, நடுவா்மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிா்த்து தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சோி, கேரளா என 4 மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம். கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று 7–வது நாளாக தொடர்ந்தது.

நேற்று கா்நாடகா அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞா் ஷியாம் திவான் வாதாடினார். மேலும் கர்நாடகாவுக்கு வாதங்களை முன்வைக்க இன்று (புதன்கிழமை) 1 மணி நேரம் அளிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அதன் படி இன்றைய விசாரணையில் கர்நாடகா தரப்பில் ஒரு மணி நேரம் வாதிடபட்டது.

அப்போது கர்நாடகா தரப்பில் வக்கீல் கூறும் போது:-
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 192 டி.எம்.சி. வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நீர் தேவையை விட கூடுதலாக 90 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. பாசன பகுதிகளை தாண்டி 14tmc தண்ணீரை தமிழக அரசு பயன்படுத்துகிறது. நடுவர் மன்ற தீர்ப்பின் படி பாசன பகுதிகளை தாண்டி உபயோகிக்கக் கூடாது. கர்நாடகாவின் நீர் தேவையையும், வறட்சியையும் கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்க வேண்டும் . என கூறினார்.

காவிரி வழக்கு வாரத்தில் 3 நாட்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. நேற்றோடு கர்நாடகா 7 நாட்களாக வாதங்களை முன்வைத்துள்ளது. இறுதி விசாரணை நடைபெறும் 15 நாட்களில் 6 நாட்கள் கர்நாடகாவுக்கும், 6 நாட்கள் தமிழ்நாட்டுக்கும், மீதமுள்ள 3 நாட்கள் கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கும் ஆரம்ப காலத்தில் ஒதுக்கப்பட்டது. தற்போது கர்நாடகா ஒரு நாள் கூடுதலாக எடுத்துக் கொண்டுள்ளது. இன்றுடன் கர்நாடக அரசின் வாதம் நிறைவுற்றது.

The final argument of Karnataka came to an end

அடுத்த செய்தி