ஆப்நகரம்

Lockdown 3: முதல் ரயில் கிளம்பியது... சொந்த ஊருக்குக் செல்லும் வெளிமாநில மாணவர்கள்

வெளிமாநில மாணவர்களைச் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லும் முதல் ரயில் இன்று ஜார்க்கண்டிலிருந்து கிளம்பியது. ஏற்பாடுகள் எப்படி செய்யப்பட்டிருந்தன தெரியுமா?

Samayam Tamil 2 May 2020, 9:52 am
பிறமாநில மாணவர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் ரயில் மூலமாகத் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்வது தொடர்பான அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, முதல் ரயில் ஜார்க்கண்டிலிருந்து ராஜஸ்தானுக்கு இன்று பயணிகளுடன் புறப்பட்டது.
Samayam Tamil the first batch of students from jharkhand to ranchi started journey through train
Lockdown 3: முதல் ரயில் கிளம்பியது... சொந்த ஊருக்குக் செல்லும் வெளிமாநில மாணவர்கள்


கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இரண்டு கட்ட ஊரடங்குகளைத் தொடர்ந்து மூன்றாம் கட்டமாகப் 14 நாட்கள் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு சமயத்தில் யாரும் கூட்டமாக வெளியில் செல்லக்கூடாது என்பது பொதுக் கட்டுப்பாடு. அதுவும் கொரோனா வைரஸ் பரவுவதால் சமூக இடைவெளியும் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதால், மார்ச் 25ஆம் தேதியன்று முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதலே பிறமாநில மாணவர்கள்கள், தொழிலாளர்கள்,பயணிகள் ஆகியோர் வெவ்வேறு மாநிலங்களில் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனைக் கருத்தில் கொண்டு, “பிற மாநிலங்களில் தவித்து வரும் மக்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் போக்குவரத்து ஏற்பாடு செய்து அழைத்துச் செல்லலாம்” என மத்திய அரசு அறிவித்தது.


இதன் விளைவாக ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டாவிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ராஞ்சியை நோக்கி ஒரு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு பயணிகள் அனுப்பப்பட்டுள்ளனர். முதல் கட்டமாக இந்த ரயிலில் வெளிமாநில மாணவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

கொரோனா விதிகளை மீறினால் 14 நாட்களுக்கு வீட்டுக்குப் போக முடியாது - சென்னை மாநகராட்சி

சமூக இடைவெளியை உறுதி செய்யும் விதமாக இருக்கைகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு பயணிக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய பை ஒன்றும் வழங்கப்பட்டு இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்தப் பயணத்தின் வெற்றியைப் பொறுத்து அடுத்தடுத்து இதே நடைமுறையைத் தொடர்வது குறித்து முடிவுகள் எடுக்கப்படலாம். இதுகுறித்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், “இந்த உத்தரவுக்காக மத்திய அரசுக்கும் ராஜஸ்தான் அரசுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதே போல இன்னொரு ரயில் நாளை தன்பாத் நகரிலிருந்து கிளம்பும்” என்றும் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பும் தொழிலாளர்களுக்கும் ஏற்பாடுகள் செய்யவிருகின்றன. இந்நிலையில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி