ஆப்நகரம்

சிபிஎஸ்இ இரண்டாம் பருவத் தேர்வில் மாற்றமா? அதிகாரபூர்வ விளக்கம்!

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு குறித்து இணையதளத்தில் வெளியாகும் பொய்யான செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

Samayam Tamil 6 Jan 2022, 9:24 am
சிபிஎஸ்இ தேர்வு குறித்து இணையத்தில் பரப்பபடும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil cbse exam


கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டன. இந்த கல்வியாண்டில் பொதுத் தேர்வு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, முதல் பருவத்தேர்வு கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது.
2ஆவது பருவத் தேர்வு வரும் மார்ச், ஏப்ரலில் நடைபெற உள்ளது. இந்நிலையில், சிபிஎஸ்இ 2ஆம் பருவத் தேர்வு முறை மாற்றம் குறித்த முக்கிய செய்தி என்று ஆன்லைனில் பொய்யான தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ நேற்று (ஜனவரி 5) வெளியிட்ட அறிக்கையில், “முக்கிய செய்தி' என்ற பெயரில் 10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ இரண்டாம் பருவத் தேர்வு முறையில் மிகப்பெரிய மாற்றம் கொண்டுவரப்பட்டிருப்பதாக சில இணையதள ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிட்டு பாா்வையாளா்களைக் குழப்புகின்றன.
பாலுவுக்கு டாட்டா, கனிமொழிக்கு ஹாய்: அமித் ஷா அரசியல் விளையாட்டு!
மாணவா்களின் நலன் கருதி தேர்வு முறையில் கொண்டுவரப்பட்ட மாற்றம் குறித்து ஏற்கெனவே கடந்த ஆண்டு ஜூலையில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்படி, முதல் பருவத் தேர்வுகள் முடிவடைந்துவிட்டன. கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்டதைப் போல இரண்டாம் பருவத் தேர்வின் வடிவமும் இருக்கும். ஆகையால் சமீபத்திய, நம்பகத்தன்மையான தகவலுக்கு சிபிஎஸ்இ அதிகாரபூா்வ வலைதளத்தை மட்டும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மதுபான கடைகளை மூடுவது எப்போது?
சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பா்- டிசம்பரில் நடைபெற்றது. 2ஆவது பருவத் தேர்வு வரும் மார்ச், ஏப்ரலில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் வதந்திகளை நம்பாமல் தேர்வுக்கு தயாராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி