ஆப்நகரம்

மகள்களைக் கொண்டு நிலத்தை உழுத தந்தை: டிராக்டரோடு வந்த புதிய பிரச்சினை!

ஆந்திராவில் வறுமை காரணமாக மாடுகளுக்குப் பதிலாக தனது இரண்டு மகள்களை கட்டி வயலில் உழவு செய்த விவசாயிக்கு பாலிவுட் நடிகர் சோனு சூட் உதவியது தற்போது பல்வேறு விமர்ச்னங்களைக் கிளப்பியுள்ளது.

Samayam Tamil 29 Jul 2020, 2:39 pm
சமூக வலைதளங்களில் சில நாள்களுக்கு முன்னர் ஆந்திர மாநில விவசாயி ஒருவர் தனது இரு மகள்களைக் கொண்டு உழவு செய்த வீடியோ வைரலானது. இதைப் பார்த்த பாலிவுட் நடிகர் சோனு சூட் அவருக்கு ஒரு டிராக்டரை பரிசாக அளித்தார். சோனு சூட்டின் உதவியும் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது.
Samayam Tamil the help of bollywood actor sonu sood to andhra farme


சந்திரபாபு நாயுடு தனது தெலுங்கு தேசம் கட்சி நாகேஸ்வர ராவின் மகள்கள் வெண்ணிலா (17) , சந்தனா (15) ஆகியோரின் படிப்பு செலவை ஏற்கும் என அறிவித்தார். முன்னாள் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தன் பங்குக்கும் உதவியை அறிவித்த நிலையில் இந்த விவகாரம் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தன. அதாவது உண்மையிலேயே விவசாயி நாகேஸ்வர ராவ் வறுமையில் உள்ளாரா என்பதே விமர்சனம் வைப்பவர்களின் குரலாக உள்ளது.

டீக்கடை நடத்தி வந்த நாகேஸ்வர ராவ் கொரோனா பொது முடக்கத்தால் கடைக்கு ஆள்கள் வருவது குறைந்த நிலையில் விவசாயத்தில் கவனம் செலுத்தியுள்ளார்.

ஓட்காவுக்கு அடிமையான மனைவியை தீர்த்து கட்டிய கணவர்..! தூத்துக்குடி பரபரப்பு

தெலுங்கு தேசம் கட்சியை எதிர்க்கும் சிலர், நாகேஸ்வர ராவின் வறுமையை கேள்விக்குள்ளாக்கி சமூக வலைதளங்களில் எழுதி வருகின்றனர். ட்விட்டர் பக்கத்தில் “நாகேஸ்வர ராவ் அப்பகுதியில் நன்கு தெரிந்தவர். மதனப்பள்ளியில் இருந்து மாநில சட்டசபை தேர்தலில் கூட அவர் போட்டியிட்டார். அவரது குடும்பத்திற்கு ஒரு டிராக்டரை வாடகைக்கு அமர்த்த முடியவில்லையா? ” என்று பதிவுகள் வரத் தொடங்கியுள்ளன. ராவின் குடும்பத்தினர் அரசாங்கத் திட்டங்கள் மூலம் பெறும் நன்மைகளையும் சிலர் பட்டியலிட்டனர்.

இது மட்டுமல்லாமல் இந்த விமர்சனத்தில் மாவட்ட நிர்வாகமும் இணைந்துள்ளது. சித்தூர் மாவட்ட ஆட்சியர் நாராயண பாரத் குப்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த குடும்பம் அரசாங்கத்திடமிருந்து பல பண சலுகைகளைப் பெற்று வருகிறது என்று கூறியுள்ளார். மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட விசாரணையைத் தொடர்ந்து, உள்ளூர் வருவாய் அதிகாரிகள் ராவின் வீட்டிற்கு சென்று அவரது நிதி நிலையை ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர்.

பொது முடக்கம் நீட்டிப்பா? கலெக்டர்கள் கூட்டத்தில் முதல்வர் பேசியது இதுதான்!

இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா சார்பில் நாகேஸ்வர ராவிடம் பேசும் போது, ஒரு ஏழை எப்போதும் வறுமையிலும் அரசாங்கத்தின் தயவிலும் இருக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார். “நீங்கள் ஏழைகளாக இருந்தால், அரசாங்கம் மட்டுமே உங்களுக்கு உதவ வேண்டும் என்று அர்த்தமா, மற்றவர்கள் ஏழைகளுக்கு உதவக்கூடாதா, ”என்றும் அவர் கேட்டுள்ளார். அவர் உண்மையில் ஏழையாக என்பது குறித்து அதிகாரிகள் ‘ஆய்வு செய்ய’அவரது வீட்டிற்கு வருவதாக அவர் கூறினார்.

அடுத்த செய்தி