ஆப்நகரம்

புதிய நாடாளுமன்றம் திறப்பு எப்போது? இன்னும் எத்தனை நாள்கள் இருக்கு தெரியுமா?

புதிய நாடாளுமன்றம் திறப்பு குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 31 Dec 2022, 6:41 am
பிரம்மாண்டமாக தயாராகி வரும் புதிய நாடாளுமன்றம் எப்போது திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil new parliment


டெல்லியிலுள்ள 'சென்ட்ரல் விஸ்டா' பகுதியை மறுவடிவமைப்பு செய்யும் திட்டத்தின் கீழ் தற்போதைய நாடாளுமன்ற வளாகத்துக்கு அருகிலேயே புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டுமானப் பணிகளை பிரதமா் நரேந்திர மோடி கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

டாடா நிறுவனம் சாா்பில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. குஜராத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹெச்.சி.பி டிசைன் என்ற நிறுவனம் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை வடிவமைத்தது.
புத்தாண்டு – பொங்கல் விற்பனைக் கண்காட்சி: தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின்
நான்கு தளங்களுடன் 64,500 சதுர மீ. பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் அதி நவீன வசதிகளுடன் தயாராகி வருகிறது. இப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதால் வரும் பிப்ரவரி மாதத்தில் நிறைவு பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

திட்டமிட்டபடி பிப்ரவரி மாதத்தில் கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும் நிலையில் புதிய நாடாளுமன்ற வளாகத்துக்கான திறப்பு விழா மாா்ச் மாதம் நடைபெறும். எனவே, மாா்ச் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் தொடங்கி நடத்தப்படும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமா்வு புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடத்தப்படும் என டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

வழக்கமாக பட்ஜெட் கூட்டத்தொடா் இரண்டு அமா்வுகளாக நடத்தப்படும். ஜனவரி 30 அல்லது 31ஆம் தேதியில் குடியரசுத் தலைவா் உரையுடன் முதல் அமா்வு தொடங்கப்படும்.

பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு பிப்ரவரி மாதம் 8 அல்லது 9ஆம் தேதிகளில் முதல் அமா்வு நிறைவு பெறும்.
'தேச பாதுகாப்பை விட்டு தர மாட்டோம்! - ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்
ஒரு மாத இடைவெளிக்குப் பின் மாா்ச் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் தொடங்கப்படும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமா்வு ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் முடிவு பெறும்.

இந்த இரண்டாம் அமர்வு புதிய நாடாளுமன்றத்தில் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி