ஆப்நகரம்

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் : ராணுவ மேஜர் பலி

ஜம்மு காஷ்மீர் எல்லை கோட்டுக்கு அருகே பயங்கரவாதிகள் வைத்திருந்த வெடிகுண்டை செயழிலக்க முயற்சித்த போது ராணுவ வீரர் பலியாகியுள்ளார்.

Samayam Tamil 16 Feb 2019, 7:03 pm
ரஜோரி: ஜம்மு காஷ்மீர் எல்லை கோட்டுக்கு அருகே பயங்கரவாதிகள் வைத்திருந்த வெடிகுண்டை செயழிலக்க முயற்சித்த போது ராணுவ வீரர் பலியாகியுள்ளார்.
Samayam Tamil bomb blast


ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் அதிகமான சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது தேசத்தையே உலுக்கும் செயலாக அமைந்துள்ளது. இந்த தாக்குதலில் இறந்த வீரர்களின் இறுதிச் சடங்கு அவரவர் ஊரில் முழு அரசு மரியாதையுடன் நடைப்பெற்று வருகின்றது.
இந்த சோகம் இன்னும் அடங்குவதற்குள் மற்றொரு பயங்கரவாத செயல் அரங்கேறியுள்ளது.

வெடிகுண்டு வெடித்தது:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லை கோட்டுக்கு அருகே உள்ள ரஜோரி மாவட்டத்தில், நவ்சேரா பகுதியில் எல்லை கோட்டுக்கு 1.5 கி.மீ தொலைவில் பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம் (IED) வெடிகுண்டு இருப்பதை கண்டு பிடிக்கப்பட்டது.

புல்வாமா தாக்குதல் : கிரிக்கெட் வீரர் சேவாக் செய்த செயலால் குவியும் பாராட்டு

இதனனை செயழிலக்க வைக்க ராணுவத்தின் மேஜர் நிலையில் உள்ள ஒரு அதிகாரி முயற்சித்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் அந்த ராணுவ வீரர் உடல் சிதறி இறந்துள்ளார்.

புல்வாமா வீரர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, வேலை: ரிலையன்ஸ் அறிவிப்பு

புல்வாமா தக்குதலின் வலி இன்னும் குறைவதற்குள் மற்றொரு தீவிரவாத செயல் அரங்கேறியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி