ஆப்நகரம்

கொரோனா தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தால் இது இருக்கு என்று அர்த்தமாம்-ஆய்வில் தகவல்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அறிவுறுத்தல்களை பெரும்பாலான மக்கள் ஏன் பின்பற்றுவதில்லை என்று நடத்தப்பட்ட ஆய்வில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன

Samayam Tamil 30 Jul 2020, 5:31 pm
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில், முதன்மையானது தனி மனித இடைவெளி.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கொரோனாவுக்கான தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், தனி மனித இடைவெளி, கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவுவது, சானிட்டைசர் உபயோகிப்பது, முகக்கவசம் அணிவது போன்ற தடுப்பு நடவடிக்கைகளே தீர்வாக உள்ளது.

நோய்தொற்று உடையவரிடமிருந்து ஆரோக்கியமான நபருக்கு நோய்த்தொற்று பரவக்கூடாது என்பதற்காக சக மனிதர்களிடம் இருந்து தங்களை துண்டித்துக் கொண்டு விலகி இருத்தல் என்பதே தனி மனித இடைவெளியாகும். CDC எனப்படும் 'CENTRE OF DISEASE CONTROL AND PREVENTION' அமைப்பு 50க்கும் மேற்பட்ட மக்கள் கூடுவதை தவிர்ப்பது கொரோனா பரவுவதை பெருமளவு குறைக்கும் என்று தெரிவித்துள்ளது.

டீசல் மீதான வரி இவ்வளவு குறைப்பா? - முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

எனினும், கொரோனா தடுப்பு நடவடிக்கையான தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட எந்த ஒரு நடவடிக்கையையும் பெரும்பாலான் மக்கள் பின்பற்றுவதில்லை. இது ஏன் என்பது தொடர்பாக தேசிய அறிவியல் அகாடமி ஆய்வு மேற்கொண்டது.

அதில், தனிமனித இடைவெளியை முறையாக கடைப்பிடிப்பவர்களுக்குச் சிறந்த நினைவுத் திறன் இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அதிகமாக நினைவுத் திறன் கொண்டவர்கள் தனிமனித இடைவெளியின் நன்மையை பற்றி நன்கு புரிந்து கொள்கிறார்கள் எனவும், அதன் காரணமாகவே அவர்கள் தனிமனித இடைவெளியை சரியாக பின்பற்றுகிறார்கள் என்றும் அந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி